நீர் நிலைகளின் சிறப்புக்கள் பற்றி கூறிய நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி உழவன் பவுண்டேசன் எனும் பெயரில் பொதுநல அமைப்பை ஏற்படுத்தி, ஒவ்வொரு நீர்நிலைகளின் வரலாற்றை மாணவ, மாணவியர்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் அருகே பவானி பகுதியில் உள்ள காளிங்கராயன் வாய்க்கால் வரலாற்றை மாணவ, மாணவியர்களுக்கு எடுத்துரைக்க வந்தார். "காளிங்கராயன் வாய்க்காலின் அறிவியலும் வரலாறும் அறிய ஒரு நடை பயணம்" எனும் பெயரில் நடிகர் கார்த்தி பள்ளி மாணவ, மாணவியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
/>
/>