காவல்துறையினரால் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் குறித்த கண்காட்சி
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் 75-வது சுதந்திர விழா கண்காட்சியில், நாமக்கல் மாவட்ட காவல்துறையின் சார்பாக, தமிழ்நாடு காவல்துறையில் பயன்படுத்தப்படும் சுதந்திரத்திற்கு முன்பு தயாரிக்கப்பட்ட BOLT ACTION ரக துப்பாக்கிகளும், தற்சமயம் தயாரிக்கப்பட்ட நவீன தானியங்கி துப்பாக்கிகளும், கை துப்பாக்கிகளும் மற்றும் அதற்குண்டான தோட்டாக்களும், கலவர கூட்டத்தை கலைக்க பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளும், அதற்குண்டான கண்ணீர் புகை தோட்டாக்களும் மற்றும் கண்ணீர் புகை கைஎறி குண்டுகளும், காவலர் பாதுகாப்பு உடைகள் மற்றும் தலைகவசம் ஆகியவற்றை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு அதற்குண்டான விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
/>
/>