ட்ரம்ப் கூறிய கருத்துகளுக்கு மோடி ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை: செல்வப்பெருந்தகை

ட்ரம்ப் கூறிய கருத்துகளுக்கு மோடி ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை: செல்வப்பெருந்தகை
X

செல்வப் பெருந்தகை

போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்ப் கூறிய கருத்துகளுக்கு மோடி ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டப்பேரவை பொது கணக்குகள் குழுவின் ஆய்வுக்கூட்டம் அதன் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்கள் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் பவன்குமார், உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், அலுலர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செல்வ பெருந்தகை, “ஆய்வு கூட்டத்தில் பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் போர் தொடர்பாக வெளிநாடுகள் தலையீடு இல்லை எனக் கூறுவதற்கு பிரதமருக்கு என்ன தயக்கம்? ட்ரம்ப் கூறிய கருத்துகளுக்கு ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை. எங்கள் நாட்டு விவகாரத்தில் தலையிடுவதற்கு நீங்கள் யார் என ஏன் கேட்கவில்லை? வாஜ்பாய், இந்திரா காந்தி ஆகியோர் முந்தைய காலங்களில் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அமெரிக்கா அதிபருக்கும் இந்த போர் நிறுத்தத்திற்கும் சம்பந்தமில்லை என ஏன் வாய் திறக்க மறுக்கிறார்கள்? ராகுல் காந்தி கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக அவர் பதில் கூற வேண்டும். ஆணவ படுகொலைகளுக்கு எதிரான சட்டத்தை இயற்ற வேண்டும் என காங்கிரசும் வலியுறுத்தி வருகிறது. 2014 ஆம் ஆண்டே இது தொடர்பாக வலியுறுத்தி வந்தோம், பாஜக இதனை சட்டமாக ஏன் நிறைவேற்றவில்லை” என்றார்.

Next Story