ராசிபுரம் ஒன்றியத் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம்

ராசிபுரம் ஒன்றியத் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

ராசிபுரம் ஒன்றியத் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொங்கு திருமண மண்படத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஒன்றியத் திமுக செயலாளரும்,

ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவருமான கே.பி.ஜெகந்நாதன் தலைமை வகித்தார். தமிழக வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்டத் திமுக செயலாளருமான கேஆர்.என்.ராஜேஸ்குமார் பங்கேற்று திமுக அரசின் திட்டங்கள் குறித்தும், கட்சியினரின் தேர்தல் பணிகள் குறித்தும் பேசினர். மேலும் அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன்,

அவர்கள் பேசும் போது பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தமிழக முதல்வர் சிறப்பாக செய்து வருகிறார். எனவே பொதுமக்களாகிய நீங்கள் என்றும் தமிழக முதல்வருக்கு ஆதரவாக உறுதுணையாக இருக்க வேண்டும் அதே வேளையில் இன்று உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளராக நிற்கக்கூடிய மாதேஸ்வரனை ஆதரித்து அனைவரும் உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும், எதிர்த்துப் போட்டியிடுகின்ற அனைத்து வேட்பாளர்களையும் நீங்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்,

ஒரு ஓட்டு கூட மாற்றி அவர்களுக்கு விழுந்துவிடக் கூடாது எனவே அனைவரும் ஒன்றிணைந்து மேலும் கழகத்தினை சிறப்பாக வழி நடத்த மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செய்திட பொது மக்களாகிய நீங்கள் என்றும் கழகத் தலைவர் தளபதி முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு உறுதியாக இருக்க வேண்டும் எனவும் அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட திமுக பொருளாளரும், தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான ஏ.கே. பாலசந்தர், பேரூர் கழகச் செயலாளர்கள் பொன். நல்லதம்பி சுப்பிரமணி, மற்றும் சிவக்குமார், மணிமாறன், ராம்குமார், கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story