காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆதரவாளர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பு

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆதரவாளர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பு

தீவிர வாக்குசேகரிப்பு

தச்சூர்கோணம் பகுதியில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக இருந்தால் விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.இதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வரும் ஏப்ரல் 19 ம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்காக அதிமுக, பாஜக,நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தாரகை கத்பட் திமுக சிறுபான்மை அமைப்பினுடைய மாவட்ட_செயலாளர் திரு. டார்வின் அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்ததோடு, தச்சூர்கோணம் பகுதியில் அமைந்துள்ள st. மேரீஸ் ஆலயத்தில்,

பிரார்த்தனை மேற்கொண்டு அங்குள்ள மக்களை சந்தித்து வாக்கு சேகரித்ததோடு, அப்பகுதி இளைஞர்களுடன் உணவு அருந்தினார்.

Tags

Next Story