திருப்பத்தூர் அருகே கூடுதல் வகுப்பறை திறந்து வைத்த எம்எல்ஏ

திருப்பத்தூர் அருகே கூடுதல் வகுப்பறை திறந்து வைத்த எம்எல்ஏ
கூடுதல் வகுப்பறை திறந்து வைத்த எம்எல்ஏ 
திருப்பத்தூர் அருகே புதிய கட்டிடம் திறப்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்றார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் கதிரம்பட்டி ஊராட்சி சீரங்கம்பட்டி பகுதியில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 16 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிடம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்து கொண்டு கட்டப்பட்ட புதிய கட்டிடங்களைரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது வேடங்கள் அணிந்து நாட்டுப்புற வயல்வெளி தெம்மாங்கு பாட்டுடன் ஆடலும் சேர்ந்தாடி அசத்திகாட்டினர் பள்ளி மாணவிகள் பல்வேறு நடனங்கள் ஆடி அசத்தினர்.

கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் விஜயா அருணாசலம், ஒன்றிய கவுன்சிலர் கலைவாணி , ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி ஜெயக்குமார், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருணாநிதி, சங்கர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆளும் கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

Tags

Next Story