ஜெயகொண்டத்தில் திருமாவளவனுக்கு செல்வ பெருந்தகை வாக்கு சேகரிப்பு

ஜெயகொண்டத்தில் திருமாவளவனுக்கு  செல்வ பெருந்தகை வாக்கு சேகரிப்பு
பிரச்சாரத்தில் ஈடுபட்ட செல்வ பெருந்தகை 
ஜெயகொண்டத்தில் திருமாவளவனுக்கு செல்வ பெருந்தகை வாக்கு சேகரித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற வேட்பாளருமான தொல் திருமாவளவனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

திராவிட முன்னேற்ற கழகம் விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் தோழர்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் தோழமை கட்சிகள் இந்தியாவை மீட்டெடுப்பதற்காக சர்வாதிகாரத்தை வீழ்த்துவதற்காக ஜனநாயகத்தை வாழவைப்பதற்காக,

இந்த இந்தியா கூட்டணியின் வேட்பாளராக விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல் திருமாவளவன் ஆதரித்து பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். திருமாவளவனுக்கு ராகுல் காந்தி வாழ்த்து செய்தி அனுப்பி இருக்கிறார். இங்கு மூன்று அணிகள் தேர்தலிலே நிற்கின்றன. இந்தியா கூட்டணி ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக தேர்தலில் நிற்பது இந்தியா கூட்டணியின் வேட்பாளராக திருமாவளவன் இருக்கிறார். பாஜக பிரதமர் மோடி 10 ஆண்டுகளுக்கு முன்பு என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தார்.

5 ஆண்டுகளுக்கு முன்பு என்னென்ன வாக்குறுதி கொடுத்தார் எதையாவது நிறைவேற்றி இருக்கிறாரா? மோடி எந்த முகத்தை வைத்துக்கொண்டு வாக்கு கேட்க இங்கு வருகிறார்.. தமிழகத்துக்கு மோடி செய்த துரோகம் கொஞ்சமா, நஞ்சமா. மோடி துரோகம் செய்தார். என்றால் அவர்களுக்கு உறுதுணையாக நின்ற கட்சி அதிமுக.

நீட் தேர்வு சி ஏஏ, என் ஆர் சி பல உரிமைகளை பறித்தது பாஜக மோடி அதற்கு துணையாக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி இவர்கள் இருவரும் தான் வாக்கு கேட்க வருகிறார்கள் என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தார் நான் ஆட்சிக்கு வந்தால் 2014 இல் பிப்ரவரி 7ஆம் தேதி திருச்சியில் பேசுகிறார் மோடி எனக்கு ஆறு மாதம் கொடுங்கள் ஆட்சியில் அமர்ந்தவுடன் ஒவ்வொரு வாக்காளர் வங்கிகளும் 15 லட்சம் ரூபாய் நான் சேர்க்கிறேன் என்று கூறினார்.

இதை நம்பிய மக்கள் வங்கிகளில் கணக்கு துவங்கி வங்கி மேலாளர் இடம் பொதுமக்கள் 15 லட்சம் பணம் வந்ததா என்று கேட்டு சண்டைய செய்ய துவங்கி விட்டார்கள். வங்கி கணக்கு துவங்குவதற்காக வங்கிகளில் போடப்பட்ட தொகையும் குறைந்தபட்ச இரும்பு வைக்கப்படாததால் சுரண்டப்பட்டு விட்டதாக மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

இப்படிப்பட்ட துரோகங்களுக்கு துணை போனவர்கள் அதிமுகவினர். சமூக நீதி பேசும் பாமக சாதி வாரி கணக்கெடுக்க கூறுவார்கள் சட்டசபையில் 10.5 % சதவீதத்திற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் நான் தான் பேசினேன். காங்கிரஸ் கட்சி வன்னியர்கள் தலித்துகள் உள்ளிட்ட எந்த ஜாதியினரையும் விட்டுக் கொடுக்காத பேரியக்கம் காங்கிரஸ் பேரியக்கம். இது எங்களுடைய கடமைகளுக்கு துரோகம் செய்துவிட்டார்கள்.

எல்லோருக்குமான சமூக நீதி எல்லோருக்கமான இட ஒதுக்கீடு என்பது காங்கிரஸ் கட்சியின் நோக்கம். சமூக நீதிக்கும் சாதிவாரி கணக்கெடுப்புக்கும் தடையாக இருக்கும் பாஜகவோடு கூட்டணி சேர்ந்ததன் மூலம் பாமக துரோகம் இழைத்துவிட்டது. பாஜகவிற்கு கீழே மதிப்பெண் கொடுப்பேன் என்று கூறிய பாமக நிறுவனர் ராமதாஸ் இப்போது அந்த கட்சியோடு கூட்டணி வைத்துள்ளார். பண மதிப்பிழப்பு கொண்டு வந்தார் வாய்ப்புகள் போய்விட்டது பெட்ரோல் டீசல் விலை உயர்வு பொருளாதாரத்தை மிகவும் சீரழித்து விட்டது. 50 ரூபாய் டீசல் ₹60 பெட்ரோல் இருந்த காங்கிரஸ் காலத்தில் அனைத்தும் சீரழிந்து விட்டதாக கூறிய பாஜக இன்று 100 ரூபாய்க்கு மேல் பெட்ரோல் விற்பதற்கு காரணமானவர்களாக இருக்கிறார்கள். 420 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர் இன்று ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது நியாயமா இந்திய பொருளாதாரம் மிகவும் நொறுங்கிப் போய் இருக்கிறது.

மோடிக்கு வாய்ப்பு கொடுங்கள் அமெரிக்காவுக்கு நிகரான பொருளாதாரமாக மாற்றி தருகிறேன் என்று மோடி வாக்குறுதி அளித்தார் ஆனால் இன்றைய நிலைமை என்ன இந்திய ஆண்கள் ஒவ்வொருவர் தலைமீதும் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வைக்கப்பட்டுள்ளது. 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் ஜவர்கலால் நேரு பிரதமராக வந்தார். நேரு இந்தியாவை கட்டமைப்பை ஏற்படுத்தினார்.

நெய்வேலி சுரங்கமாகட்டும் நெய்வேலி அனல் மின் நிலையம் ஆகட்டும் அனைத்தையும் கட்டமைத்தவர் ஜவஹர்லால் நேரு அவர்களும் கர்மவீரர் காமராஜரும் தான். உலகத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் இரும்பு பெண்மணி என்று கூறிய இந்திரா காந்தி பல்வேறு நலத்திட்டங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். தாழ்த்தப்பட்ட மக்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் வங்கிக்குள் செல்ல முடியாமல் இருந்த சூழ்நிலையை மாற்றி மானியத்தை ஒழித்து ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலராக இருந்தார்.

அதன் பிறகு வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டது. அதற்கு முன் பெரிய செல்வந்தர்கள் வங்கி நடத்தி வந்தனர் ஆனால் இந்திரா காந்தி காலத்திற்குப் பிறகுதான் வங்கிகள் அனைத்தும் தேசிய மயமாக்கப்பட்டது.குப்பனும் சுப்பனும் யார் வேண்டுமானாலும் வங்கிகளுக்கு செல்லலாம் என்கிற நிலையை உருவாக்கியவர் இந்திரா காந்தி இன்று மின்னணு விஞ்ஞான யுகப் புரட்சியின் நாயகராக விளங்கக்கூடிய ராஜீவ் காந்தி. நரசிம்மராவ் மன்மோகன் சிங் ஆகியவர்களும் இந்தியாவின் பிரதமராக இருந்த காலத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டது. திமுக ஆட்சியை இரண்டே முக்கால் ஆண்டுகளாக நடத்தி வருகிறார். அவர் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் என்பது சதவீதத்தை இரண்டை ஆண்டுகளில் நடத்திவிட்டார். நீ பிரதம மந்திரியா மு க ஸ்டாலின் நல்ல முதல்வரா? மு க ஸ்டாலின் சொன்னதையும் நிறைவேற்றி இருக்கிறார் சொல்லாததையும் நிறைவேற்றி இருக்கிறார். மோடி வாக்குறுதிகளை தமாஷாக கூறி விட்டு சென்றார். ஆனால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னார் சொன்னதை செய்தார்.

அது மட்டுமல்ல என்னும் எழுத்தும் எல்லாம் தேடிக் கல்வி மக்களை தேடி மருத்துவம் நான் முதல்வன் புதுமைப்பெண் காலை உணவு திட்டம் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் ஆகிய திட்டங்களை வாக்குறுதிகளில் சொல்லவில்லை ஆனால் அவற்றை நிறைவேற்றினார். 7000 கோடி ரூபாயை தேர்தல் நன்கொடை என்று விரட்டி வாங்கி இருக்கிறீர்கள். சிபிஐ அமலாக்கத்துறை வருமானவரித்துறை ஆகியவற்றை கொண்டு மிரட்டி 7000 கோடி ரூபாயை தேர்தல் நன்கொடையாக பெற்றார்கள்.

பாரத ஸ்டேட் வங்கியையும் தேர்தல் ஆணையத்தையும் உச்சநீதிமன்றம் கடுமையாக கூறியதன் காரணமாக இவை வெளியில் வந்தன. ஒரு ஆட்சி எப்படி இருக்க கூடாதோ அப்படிப்பட்ட ஆட்சியை மோடி நடத்தி வருகிறார்.. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஏற்கனவே பல லட்சம் கோடி ஊழல் செய்யப்பட்டுள்ளது. அதனை விரிவுபடுத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்திய தேசிய காங்கிரஸ் கடந்த வாரம் வாக்குறுதி அளித்தார்கள்: நம்முடைய பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் மஹாலக்ஷ்மி திட்டம் மூலம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.ஏற்கனவே தமிழக முதல்வர் வருடத்திற்கு பன்னிரண்டாயிரம் வழங்கி வருகிறார்.

இப்போது காங்கிரஸ் அறிவித்துள்ள ஒரு லட்சமும் சேர்த்து ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் கிடைக்க இருக்கிறது. படித்து வேலையில்லா பட்டதாரிகளுக்கு அப்ரண்டீஸ் பயிற்சி கொடுத்து வருடத்திற்கு ஒரு லட்சம் தர இருப்பதாக கூறியிருக்கிறார். மகளிருக்கான திட்டம் இளைஞர்களுக்கான திட்டம் தொழிலாளர்களுக்கான திட்டம் இந்த தேசத்தில் 140 கோடிக்கு மேல் மக்கள் தொகை 50 கோடி மக்கள் அமைப்பு சாரா தொழிலாளர்களாக இருக்கிறார்கள் ஆட்சியில் 10 வருடங்களாக அவர்கள் 170 ரூபாய் பணம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் ராகுல் காந்தி,

ஆட்சி அமைத்த பிறகு ஒரு நாளைக்கு நான் ஒரு ரூபாய் சம்பளமாக அது உயர்த்தப்பட இருக்கிறது. சொன்ன வாக்குறுதிகளை நேர்காலத்தில் இருந்து அன்னை சோனியா காந்தி காலம்வரை நிறைவேற்றி இருக்கிறோம். எனவே ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்த சிதம்பரம் தொகுதியில் நமது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்.

அதிமுகவுக்கு வாக்கு இல்லை பாஜகவுக்கு வாக்கு இல்லை எங்கள் வாக்கு எல்லாம் இந்தியா கூட்டணிகள் போட்டியிடுகின்ற திருமாவளவனக்கு தான் எங்கள் ஓட்டு என்று பொதுமக்கள் சொல்ல வேண்டும் எல்லா மக்களுக்குமாக குரல் கொடுக்கக் கூடியவர் திருமாவளவன் தமிழ்நாட்டு மக்களின் குரலாக பாராளுமன்றத்தில் ஒலிப்பார் திருமாவளவன் இந்தத் தேர்தல் எடுப்பவர்களுக்கும் கொடுப்பவர்களுக்கும் ஆன தேர்தல். எடுப்பவர் மோடி கொடுப்பவர் ராகுல் தொல் திருமாவளவன் தவிர மீதம் இருக்கக்கூடிய அதிமுக பாஜக வேட்பாளர் உள்ளிட்ட அனைவரும் டெபாசிட் இழக்க வேண்டும்,

பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கர், மாநில நிர்வாகி ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கதிர்வளவன் திமுக நகர செயலாளரும், நகர மன்ற துணைத் தலைவருமான கருணாநிதி, நகர மன்ற தலைவர் சுமதி சிவகுமார், திமுக, விசிக, காங்கிரஸ், திக,மாஸ்டர் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மதிமுக மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகைக்கு பிறந்தநாள் முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டி கொண்டாடினர்

Tags

Next Story