உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் - அமைச்சர் அன்பில் மகேஸ் கொடியேற்றினார்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொடியேற்று விழா அமைச்சர் அன்பில் மகேஸ் கொடியேற்றினார்

நாமக்கல் மேற்கு மாவட்டம் எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 46 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு திமுக இரு வண்ணக் கொடியேற்று விழா எலச்சிபாளையம் சுந்தரம் திடலில் நடைபெற்றது.

இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் தலைமை தாங்கினார். வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் சிறப்புரையாற்றினார். எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் எம்.தங்கவேல் வரவேற்புரையாற்றினார் ஒன்றிய திமுக நிர்வாகிகள் ராஜு துரைசாமி ராமசாமி தனசேகர் செல்வம் லட்சுமண குமார் வீரமணி மலர் அகரம் ஊராட்சி மன்ற தலைவர் லதா லட்சுமண குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸவிழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆகியோர் கலந்து கொண்டு திமுக இருவண்ணக் கொடியேற்றி சிறப்புரையாற்றி, கல்வெட்டை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சி.ஆனந்தகுமார், நகர மன்றத் தலைவா் மோ.செல்வராஜ், ஒன்றிய கழகச் செயலாளர்கள் வட்டூர் ஜி.தங்கவேல், கே.செல்வராசு. பி.பி.தனராசு, கே.கே.சண்முகம், என்.நாச்சிமுத்து, ஆர்.செல்வம், ஆ.இளங்கோவன், பேரூர் கழக செயலாளர்கள் மு.திருமலை, எஸ்.பி.கார்த்திக் ராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் கே.மயில்சாமி, சாந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.ரங்கசாமி, மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் ஆா்.பாலாஜி, திருச்செங்கோடு ஒன்றியக்குழு துணைத் தலைவர் ராஜவேல் (எ) ராஜபாண்டி, மாவட்ட சார்பாக நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம் ராஜசேகரன் ஜெயமணி ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் சதீஷ்குமார் எஸ் சதீஷ்குமார் பாலமுருகன் அகரம் கொன்னையார் ஊராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.

Tags

Next Story