- Home
- /
- ஷாட்ஸ்

இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என சென்னை பெரம்பூரில் நடைபெறும் ரம்ஜான் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். “அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு அடையும் வளர்ச்சிக்கு அடித்தளமாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்றம், கூட்டுக்குழுவில் திமுக சார்பில் குரல் எழுப்பி வருகிறோம். இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் சட்டத்திருத்தத்துக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்” எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

கோயில் விழாக்களில் ஒவ்வொரு ஜாதியினருக்கும் ஒரு நாள் என ஒதுக்கீடு செய்யும் நடைமுறையை தவிர்க்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. பக்தர்கள், உபயதாரர்கள் அல்லது ஊர் பொதுமக்கள் என்ற அடிப்படையில் அடுத்த ஆண்டு முதல் விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.

சிங்காநல்லூரில் ஆன்லைன் வர்த்தக முதலீட்டில் அதிக லாபம் பார்க்கலாம் எனக்கூறி ரூ.8.65 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. பெண்ணிடம் வாட்ஸ் அப் மூலம் தொடர்புகொண்டு மோசடி செய்த கோவாவை சேர்ந்த ராமச்சந்திரன் (37) என்பவர் கைதாகினார். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

0 நாள் வேலை திட்டம் காந்தி பெயரில் உள்ளதால் அது மோடி அரசுக்குப் பிடிக்கவில்லை என அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். 100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதி யாருடைய பணமும் கிடையாது; அது அரசின் பணம். 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியை வழங்க முடியாமல் ஒன்றிய அரசு ஏமாற்ற முடியாது. பாஜக, மோடி எனக் கூறி யாரும் ஓட்டு கேட்க முடியாது; அந்த அளவுக்கு மக்களுக்கு துரோகம் செய்துள்ளனர் என தெரிவித்தார்.

பிரேசில் லெஜன்ட்ஸ் – இந்தியன் லெஜன்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியை காண மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள நேரு மைதானத்தில் நாளை போட்டி நடைபெறுகிறது. போட்டிக்கான ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி செல்லலாம். போட்டிக்கான நுழைவுச் சீட்டுகளில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

சோழவரம் அருகே ஆத்தூரில் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கிய வினித், முருகள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆதம்பாக்கத்தில் கைது செய்யப்பட்ட பார்த்திபன் என்பவர் அளித்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். போலீசாரின் சோதனையில் சோழவரம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆக்கபூர்வமான அரசியல் செய்யுங்கள், வீண் புரளி கிளப்ப வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்; சட்டம் – ஒழுங்கு சரியாக இருப்பதால்தான் தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகள் வந்து குவிகின்றன. தமிழ்நாட்டில் குற்றங்கள் அதிகரித்திருக்கிறதா – குறைந்திருக்கிறதா என்பதைப் புள்ளிவிவரங்கள் சொல்லும். கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலங்கள் போல் சாதி – மத மோதல்கள் நிகழ்ந்துள்ளனவா? குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகிறார்களா?. சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளைப் பூதாகரமாக்கி, மக்களைக் குழப்பவும் – திசைதிருப்பவும் எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன என முதல்வர் பதிவிட்டுள்ளார்.

எலைட் திட்டத்தில் பயன்பெறும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை 25ல் இருந்து 50ஆக உயர்ந்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். MIMS திட்டத்தில் பயன்பெறும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை 75ல் இருந்து 125ஆக உயர்ந்துள்ளது. CDS திட்டத்தில் பயன்பெறும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை 100ல் இருந்து 200ஆக உயர்ந்துள்ளது. திட்டங்களை செயல்படுத்த ஆண்டுதோறும் ரூ.38 கோடி நிதி ஒதுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

கூட்டணி பற்றி பேச இன்னும் நிறைய காலம் உள்ளது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம் என டெல்லியில் அண்ணாமலை பேட்டியளித்தார். அப்போது, பாஜக யாருடன் கூட்டணி என்பது குறித்து தற்போது பேச வேண்டிய அவசியம் இல்லை. மைக் எடுத்து பேசி கைகாட்டி விட்டுப்போவதில்லை அரசியல்; களத்துக்கு வரவேண்டும் என மீடியா வெளிச்சத்துக்காக பிரதமர் குறித்து விஜய் பேசுகிறார் என்று அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

குணால் கம்ராவுக்கு இடைக்கால முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவசேனாவை உடைத்து, பாஜக கூட்டணியில் இணைந்து ஏக்நாத் ஷிண்டே முதல்வரானதை விமர்சித்திருந்தார் குணால் கம்ரா. ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்தது தொடர்பான வழக்கில் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ராவுக்கு இடைக்கால முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.