- Home
- /
- ஷாட்ஸ்

சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகருக்கு நோக்கி வந்த மெட்ரோ ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் பழுதாகி நின்றது. சென்ட்ரல் மெட்ரோ நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுவழியில் நின்றதால் பயணிகள் தவித்தனர். சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக பயணிகள் ரயில் உள்ளே சிக்கிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்மழை காரணமாக சென்னையில் 8 இடங்களில் மரங்கள் சாய்ந்தன. சென்னையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால், சென்னை திருவல்லிக்கேணி செம்பியம், வில்லிவாக்கம் கீழ்ப்பாக்கம் உள்பட 8 இடங்களில் மரங்கள் சாய்ந்தன. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இரவோடு இரவாக மரங்களை அறுத்து அப்புறப்படுத்தினர்.

சென்னையில் பலத்த காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, கிண்டி, ஆலந்தூரில் மழை பெய்து வருகிறது. சென்னையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கக் கடலில் பல மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது. கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து சென்னையில் நாளை நடைபெற இருந்த பாமக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்ததை கண்டித்து ராமதாஸ் அணி போராட்டம் அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நாளை நடைபெற இருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பாமக தெரிவித்துள்ளது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள செங்கோட்டையனுக்கு அக்கட்சியின் உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கோட்டையன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 28 பேர் கொண்ட எனது கண்காணிப்பில் இயங்கும் கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். இவர் இக்குழுவை வழிநடத்தி கழகத்தின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க எனக்கு உறுதுணையாகச் செயல்படுவார். மேலும், கூடுதலாக ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார். என்னோடும், பொதுச்செயலாளருடனும் கலந்தாலோசித்து கழகப் பணிகளை மேற்கண்ட மாவட்டங்களில் மேற்கொள்வார்.

கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் குற்றவாளி சதீஷுக்கு தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. சதீஷுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது சென்னை உயர் நீதிமன்றம். 2024ல் சதீஷுக்கு தூக்கு தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. 2022 அக்.13ல் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு சதீஷ் கொலை செய்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், த.வெ.க.வில் இணைந்தார். பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன். செங்கோட்டையனுடன் அவரது ஆதரவாளர் சத்தியபாமா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தார். செங்கோட்டையனுக்கு இன்று அல்லது நாளை தவெகவில் முக்கிய பதவி வழங்கப்படலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

200 தொகுதிகளிலும் வென்று வரலாறு படைப்போம் என்பதுதான் எனது பிறந்தநாள் வாழ்த்து செய்தி என சென்னை வேப்பேரியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். திராவிட மாடல் அரசு என்றால் அனைவருக்குமான அரசாக இருப்பதுதான். 200 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்ற உணர்வோடு களத்தில் பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 தேசிய காவல்படை வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து வெள்ளை மாளிகை பூட்டப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ரஹ்மானுல்லா லகன்வால் (29) என்பவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.













