ஷாட்ஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ள அஞ்சலை மீது மேலும் ஒரு வழக்கு

திருவள்ளூர் மாவட்டம், மாத்தூரை சேர்ந்தவர் வக்கீல் சிவா (38). இவரை தனிப்படை போலீசார் விசாரித்தனர். அதில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டதால், சிவாவை நேற்று போலீசார் கைது செய்தனர். தலைமறைவான சம்பவ செந்தில், வக்கீல் சிவா மூலம் பணப் பரிவர்த்தனை செய்ததும், சம்பவ செந்திலுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. பிறகு எழும்பூர் 5வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிவாவை பூந்தமல்லி கிளை சிறையில் அடைத்தனர். சிவா வீட்டிலிருந்து ரூ.9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிவாவுடன் சேர்த்து இதுவரை 5 வக்கீல்கள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள்புறக்கணிப்பு : மாயாவதி விமர்சனம்

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒன்றிய அரசு நடந்துகொள்வது இது புதிதல்ல என்றும் ஒன்றிய அரசின் பாகுபாட்டை உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் ஆட்சிகாலத்திலும் சந்திக்க வேண்டியிருந்தது என்றும் அவர் கூறினார்.

பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய அரசை கண்டித்து திமுக நாளை ஆர்ப்பாட்டம்: மாவட்ட தலைநகரங்களில் நடக்கிறது

ன்றிய பட்ஜெட்டில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய அரசைக் கண்டித்து நாளை மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

காவிரி நீர் பெற்றுத்தர நடவடிக்கை: பிரேமலதா வேண்டுகோள்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று வெளியிட்ட அறிக்கை: எப்போதும் மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் முதலில் களம் இறங்கி மக்களுக்காக போராடும் ஒரு கட்சியாக என்றைக்கும் தேமுதிக இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறோம். அதேபோல் ரேஷன் கடையில் பாமாயில், பருப்பு வகைகள், சர்க்கரை மற்றும் கோதுமை போன்ற பொருட்கள் சரியான முறையில் கிடைக்க ஆவன செய்ய வேண்டும். மேலும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நமது உரிமையான தண்ணீரை பெற்று தர வேண்டும். எனவே காங்கிரஸ் கட்சியுடன் பேசி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திரைமறைவில் நடக்கும் ரகசிய பேச்சுவார்த்தை அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்சை இணைக்க எடப்பாடிக்கு நெருக்கடி: மாஜி அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் அழுத்தம்

அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என நிர்வாகிகள் விரும்புகின்றனர். எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கமாக இருப்பவர்களும், ஒன்றாக இணைய வேண்டும் என வலியுறுத்தி உள்ளதால் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகளை சேர்க்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளார். அப்படியே சேர்த்தால் தேவையில்லாத பிரச்னை, குழப்பம், முக்கிய பொறுப்புகளை கேட்பார்கள் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகள் மீது போடப்பட்ட 5000க்கும் மேற்பட்ட வழக்குகளை ரத்து செய்ய முதல்வர் உத்தரவு: மல்லை சத்யா நன்றி

10 ஆண்டுகால அதிமுக ஆட்சி காலத்தில் ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கும் வகையில் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சிகள் மீது போடப்பட்ட 5000க்கும் மேற்பட்ட வழக்குகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ரத்து செய்ததில், என் மீதான 25க்கும் மேற்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட்டது. இதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாசுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளில், அவர் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பள்ளிக் குழந்தைகள் உயிர் காத்த ஓட்டுநர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘‘உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்த நிலையிலும் தன் பொறுப்பிலிருந்த பள்ளிக் குழந்தைகளின் விலைமதிப்பில்லாத உயிர்களை காப்பாற்றி பின்னர் தனது இன்னுயிரை இழந்த சேமலையப்பன் கடமை உணர்ச்சியையும் தியாக உள்ளத்தையும் நாம் தலைவணங்கி போற்றுகிறோம். காலம் சென்ற பள்ளி வாகன ஓட்டுநர் சேமலையப்பன் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த சேமலையப்பன் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்’’ என கூறி உள்ளார்.

திமுக கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ் நிர்வாகிகள் கருத்து !அறிக்கை தாக்கல் செய்ய ராகுல்காந்தி உத்தரவு

தேர்தலின் போது தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், அவ்வாறு பேசி வரும் தமிழக காங்கிரசில் உள்ள முக்கிய நிர்வாகிகளின் பட்டியலை எடுக்கவும் டெல்லி தலைமை முடிவு செய்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக அறிக்கையை தாக்கல் செய்யும்படி, தமிழக மேலிட காங்கிரஸ் பொறுப்பாளர் அஜோய் குமாரிடம் மேலிட காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரியில் 1,10,000 கனஅடி நீர் திறப்பு!!

கர்நாடக மாநிலம் கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரியில் 1,10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கேஆர்எஸ் அணையிலிருந்து 90,000 கனஅடி நீரும், கபினியில் இருந்து 20,000 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

கார்கில் தியாகிகளுக்கு தலைவணங்குகிறேன் : குடியரசுத் தலைவர்

கார்கில் போரில் தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் நான் தலை வணங்குவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். கார்கில் தியாகிகளின் வீரத்தால் நாட்டில் அனைத்து மக்களும் உத்வேகம் பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். கார்கில் போர் வெற்றியின் 25வது ஆண்டு நிறைவு இன்று அனுசரிக்கப்படுகிறது.

கார்கில் போர் 25வது ஆண்டு வெற்றி தினம்: நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!

கார்கில் போர் வெற்றி தினத்தின் வெள்ளி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 25 ஆண்டுதினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று காலை கார்கில் வந்தார். கார்கில் வெற்றியின் 25- வது ஆண்டு நிறைவை ஒட்டி, டிராசில் உள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். டிரசில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.

வருமான வரி விதிப்பு நடைமுறையில் மாற்றம்!!

புதிய வருமான வரி முறையில் ரூ.3 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு வரி இல்லை. ரூ. 3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வருமானம் பெறுவோருக்கு 5% வருமான வரி விதிக்கப்படும். ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு ரூ.10% வரி விதிக்கப்படும். ரூ.10 லட்சம் ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுபவர்கள் ரூ.15% வரி செலுத்த வேண்டும். ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை ஆண்டுதோறும் வருமானம் பெறுவோருக்கு 20% வரி விதி விதிக்கப்படும். ஆண்டுக்கு ரூ.15 லட்சத்திற்கும் மேல் வருமானம் பெறுவோருக்கு 30% வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இணைய வர்த்தகத்திற்கான TDS குறைப்பு!!

இணைய வர்த்தகத்திற்கான TDS வரி குறைக்கப்படுவதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். TDS தாக்கல் தாமதம் இனி கிரிமினல் குற்றமல்ல. TDS தாக்கல் செய்யப்படுவதற்கான தாமதம் இனி கிரிமினல் குற்றமாக கருதப்படாது. அறக்கட்டளைகளுக்கு ஒரே வரி முறை அறிமுகப்படுத்தப்படும்.இரண்டு முறையாக இருந்த வரி செலுத்துவது ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே முறையாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி குறைக்கப்படும்: நிர்மலா சீதாராமன்

தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி குறைக்கப்படும் என்று பட்ஜெட்டில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தங்கம், வெள்ளிகளுக்கான சுங்கவரி 6% ஆகவும், வைரத்திற்கு 8.4%ஆகவும் குறைக்கப்படும். தங்கம், வெள்ளி பொருட்களுக்கு 15% ஆக உள்ள இறக்குமதி வரி 6%ஆக குறைக்கப்படுகிறது. தங்கம், வெள்ளிகளுக்கான இறக்குமதி வரி 6% ஆகவும், பிளாட்டினத்திற்கு 6.4%ஆகவும் குறைக்கப்படும் என்று பட்ஜெட்டில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல்; சென்செக்ஸ் 1200 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ததை அடுத்து சென்செக்ஸ் 1200 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி அடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 79,322 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 409 புள்ளிகள் சரிந்து 24,099 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. ஒன்றிய பட்ஜெட்டில் முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்புகள் ஏதும் இடம்பெறாத நிலையில், கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு!!

முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். MSMEகள் தங்கள் மன அழுத்த காலத்தில் வங்கிக் கடனைத் தொடர வசதியாக புதிய வழிமுறை அறிவிக்கப்பட்டது. பிரதமரின் முத்ரா யோஜனா திட்டமானது கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கார்பரேட் அல்லாத வேளாண் தொழில் சேராத நிறுவனங்களுக்கு ரூ 10 லட்சம் வரை கடன் தொகை வழங்குவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

நாட்டின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் ஒரு தமிழர்... யார் அவர்?

இந்தியாவின் முதல் மத்திய நிதியமைச்சர் ஒரு தமிழர் என்பது உங்களுக்கு தெரியுமா? கோவையைச் சேர்ந்த சண்முகம் செட்டியார், சுதந்திரம் பெற்ற பின், நேரு தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக பதவி வகித்தார். நவ.26 1947ஆம் ஆண்டு நாட்டின் முதல் பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார். அப்போதைய, பட்ஜெட் மதிப்பு ₹197.39 கோடி ஆகும். கடந்த நிதியாண்டின் பட்ஜெட் மதிப்பு ₹45,03,097 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. 

7.5% இடஒதுக்கீடு-மாற்றுத்திறனாளிகளுக்கு 111 இடங்கள்: அமைச்சர் பொன்முடி

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பிரிவில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 111 பேர் சேர்வதற்கான இடங்கள் உள்ளன என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 7.5 சதவீத சிறப்பு பிரிவில் உள்ள 111 இடங்களுக்கு 664 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

கர்நாடக அணைகளில் இருந்து  காவிரியில் 68,000 கனஅடி நீர் வெளியேற்றம்!!

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 68,000 கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 50,801 கனஅடி நீரும், கபினியில் இருந்து 17,375 கனஅடி நீரும் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.காவிரியில் 68,000 கனஅடி நீர் வெளியேற்றம்..!!