- Home
- /
- ஷாட்ஸ்
பெங்களூருவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவாஜி நகர், ஒக்கலிபுரம், கே.ஆர்.புரம், ராஜாஜி நகர், மல்லேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பெங்களூரு கிராமபுரா அருகே இடி தாக்கி ஒரு பெண் உயிரிழந்தார். மேலும் அப்பகுதியில் இருந்த 20 ஆடுகளும் இறந்தன.
தமிழ்நாட்டில் இன்று 18 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது. தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக ஈரோட்டில் 110 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. கரூர் பரமத்தி, வேலூர், திருத்தணியில் தலா 109 டிகிரி, திருப்பத்தூரில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. திருவண்ணாமலை, சேலத்தில் தலா 105 டிகிரி, மதுரை நகரம் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடும் வெப்பம் நிலவுவதால் கட்டாய சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது குறித்து கல்வி அலுவலர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
மாணவர்களின் குடிநீர் பாட்டில் தெளிவாக தெரியக்கூடியவையாக இருக்க வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை அறிவுரை வழங்கியுள்ளது. நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை, மாணவர்கள் எழுதிப்பார்க்க வெள்ளை காகிதம் வழங்கப்படாது, புக்லெட்டிலேயே எழுதிக்கொள்ளலாம் என்று அறிவுரைகளை வழங்கியுள்ளது.
பரிசல் சென்ற ஆற்றில் இன்று பேருந்துகள் செல்லும் அளவுக்கு நீர்நிலைகள் மாறியுள்ளன என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் நீர்நிலைகளில் இருப்பு குறைந்து குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும் குடிநீர் பிரச்சனையை அரசு தீர்க்கவில்லை என்றும் கூறிய அவர், மழைக்காலத்தில் தண்ணீரை சேமிக்காததால் தற்போது பிரச்சனை தலைதூக்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10-31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் www.tndalu.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் படுகொலைக்கு காவல்துறையே பொறுப்பு என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். மேலும் தனசிங் படுகொலை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்றும் ஜெயக்குமார் படுகொலையில் உண்மை வெளிவர வேண்டும் என்றும் கூறிய அவர், குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டின் வளர்ச்சிக்கான திட்டத்தை கொடுத்துள்ளேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் பீகாரில் 40 லட்சம் ஏழைகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் 1.25 கோடி மக்களுக்கு கேஸ் மற்றும் இலவச மருந்து, உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.