ஷாட்ஸ்

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.7 ஆக பதிவு: சுனாமி எச்சரிக்கை!!

ஜப்பானில் 6.7 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜப்பான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் 6.7 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன்பு 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து ரூ.98,000க்கு விற்பனை!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து ரூ.98,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.12,250க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ஒரு கிராம் ரூ.215க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.6,000 உயர்ந்து கிலோ ரூ.2.15 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து!!

நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் தனது நடிப்பாற்றலால் பல தலைமுறைகளை கவர்ந்துள்ளார். ரஜினிகாந்தின் திரையுலக படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி தொடர்ச்சியான முத்திரை பதித்துள்ளன. நடிகர் ரஜினிகாந்த் நீண்டகாலம், ஆரோக்கியமான வாழ்க்கை வாழ பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு - தாம்பரம் இடையே மின்சார ரயில் தாமதம்: பயணிகள் தவிப்பு!!

செங்கல்பட்டு - தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் தாமதம் காரணமாக பல ஆயிரம் பயணிகள் தவித்து வந்தனர். மின்சார ரயில்கள் தாமதம் காரணமாக கல்லூரிகள், அலுவலகங்கள் செல்வோர் பாதிப்படைந்தனர்.

ஆந்திராவில் பேருந்து கவிழ்ந்ததில் 15 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு!!

ஆந்திராவில் அல்லூரி சீதாராமா ராஜு மாவட்டத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 15 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 35 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர். பத்ராசலம் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அன்னாவரம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது பேருந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 15 பேர் உயிரிழந்த நிலையில் பேருந்து விபத்தில் காயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4-ஆக பதிவு!!

தஜிகிஸ்தானில் நள்ளிரவு 12.55 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் பொருள் சேதமோ, உயிர்ச்சேதமோ எதுவும் நிகழ்ந்ததாக உடனடி தகவல் இல்லை.

புதுச்சேரியில் ரூ.750 பொங்கல் பரிசு; முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!!

பொங்கல் பண்டிகையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.750 மதிப்பிலான பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதில் அரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், பருப்பு, சர்க்கரை, நெய், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இந்த பரிசு தொகுப்பு வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி தேர்வு!!

அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியதும் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவர் பேசும்போது, "கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால், கட்சியின் சட்டதிட்ட விதிகளின்படி, தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி தேர்வு செய்யப்படுகிறார். அவர் இந்த கூட்டத்தை நடத்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றார். எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த இந்த தீர்மானத்தை கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிந்தார். அதனைத் தொடர்ந்து மேடையில் இருந்த கே.பி.முனுசாமி, எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வாக்குச்சாவடியை வென்றால் தொகைதிகளை வெல்லலாம் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் பேசியிருந்தார். தமிழ்நாடு முழுவதும் வாக்குச் சாவடி அளவில் வியூகம் வகுக்க திட்டம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

செங்கோட்டையனை தொடர்ந்து தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்?

ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் துணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் இருந்து வருகிறார். இந்நிலையில் அங்கிருந்து விலகி வைத்திலிங்கம் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. வைத்திலிங்கம், 2001-2006 மற்றும் 2011- 2016 காலகட்டத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். இப்போது அவர் ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!!

பனையூரில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நாளை (11-12-2025) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதன்படி மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகளுடன் நாளை விஜய் அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் பணிகள், சிறப்பு தீவிர திருத்தம், அடுத்த கட்ட மக்கள் சந்திப்பு பயண ஏற்பாடுகள் குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

வெள்ளி விலை; ஒரே நாளில் 8000 உயர்ந்தது!!

22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.12,030க்கும், ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.96,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிராம் ரூ.207க்கும், ஒரு கிலோ ரூ.2,07,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

அமெரிக்காவில் இருந்து 3258 இந்தியர்கள் நாடு கடத்தல்: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர்

2025 ஜனவரி முதல் தற்போது வரை அமெரிக்காவில் இருந்து 3258 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் பதில் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 1368 பேர் நாடு கடத்தப்பட்ட நிலையில், சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கைகளை ட்ரம்ப் தீவிரப்படுத்தியதால் இந்தாண்டு எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. 2009ல் இருந்து மொத்தம் 18,822 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அந்தமான் கடலில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டரில் 4.5 ஆக பதிவு!!

அந்தமான் கடலில் நள்ளிரவு 12.02 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது. இதனால், அந்தமான் நிகோபார் தீவுகளின் சில பகுதிகளில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.

திருப்பரங்குன்றம் தீபம்: போராட்டம் நடத்திய நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு!!

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக போராட்டம் நடத்திய நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நயினார் நாகேந்திரன் உட்பட 93 பேர் மீது வழக்கு திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் 10 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிக்குள் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக-பாஜக கூட்டணியில் யாரும் சேரவில்லை: துணை முதல்வர் உதயநிதி

அதிமுக-பாஜக கூட்டணி அமைத்து 8 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்தக் கட்சியும் அக்கூட்டணியை நம்பி போகவில்லை என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். அமித்ஷாவை யார் பாராட்டிப் பேசுவது என்பதுதான் அதிமுக அணிகளுக்கு இருக்கும் ஒற்றுமை. வெறுப்பு அரசியல் செய்யும் அதிமுக - பாஜக கூட்டணியை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

டெல்லியில் 23வது உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் புதின்!!

டெல்லியில் இந்தியா-ரஷ்யாவின் 23வது வருடாந்திர உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்கிறார். பாதுகாப்பு, விண்வெளி, எரிசக்தி, ராணுவம் தொடர்பாக பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புதின் இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம்.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 13.4 செ.மீ. மழைப் பதிவு!!!

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 13.4 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பாரிமுனையில் 26.5 செ.மீ., எண்ணூரில் 26.4 செ.மீ., ஐஸ் அவுஸில் 23.1 செ.மீ, பேசின் பிரிட்ஜ்-ல் 20.7 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.