ஷாட்ஸ்

பா.ஜ.க.வை கண்டித்து மதுரையில் வருகிற 18-ந்தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்!!

அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் தமிழர் விரோத பா.ஜ.க அரசைக் கண்டித்து வருகிற ஜூன் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு தி.மு.க. மாணவர் அணி சார்பில், "மதுரை, வீரகனூர் சுற்றுச்சாலை"யில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். 

அகமதாபாத் விமான விபத்து - சம்பவ இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு!!

குஜராத் மாநிலம் அகமதாபத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட் ஏர் இந்தியா விமானம் டேக்ஆஃப் ஆன சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் 242 பேர் பயணம் செய்தனர். விபத்தில் ஒருவரை தவிர்த்து 241 பேரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

விழுப்புரத்தில் ஏடிஎம்-ல் நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்த 4 பேருக்கு போலீசார் வலை!!

விழுப்புரத்தில் ஏடிஎம்-ல் அலுமினிய தகடு மூலம் நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். எஸ்.பி.ஐ. ஏடிஎம்-ல் பணம் வெளியே வரும் பகுதியில் அலுமினிய தகடை மர்மகும்பல் வைத்து சென்றுள்ளது. வாடிக்கையாளர் ஏடிஎம் கார்டில் இருந்து பணம் எடுத்தபோது வங்கிக் கணக்கில் இருந்து பணம் டெபிட் ஆகியுள்ளது. வாடிக்கையாளர்களின் பணம் டெபிட் ஆனபோதும் ஏடிஎம்-ல் இருந்து பணம் வரவில்லை. நள்ளிரவில் ஏடிஎம்-ஐ கள்ளச்சாவி மூலம் திறந்து மர்மகும்பல் வாடிக்கையாளர்களின் பணத்தை எடுத்துள்ளது.

அகமதாபாத் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு!!

அகமதாபாத் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டது. கருப்புப் பெட்டியில் பதிவான தகவல்களை ஆய்வு செய்ய 10 முதல் 15 நாட்களாகும். கருப்பு பெட்டியில் பதிவான தகவல்கள் அடிப்படையில் விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும். விமான விபத்துக்கான காரணத்தை அறிவதில் கருப்பு பெட்டி முக்கியப் பங்கு வகிக்கிறது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6896 கன அடியாக அதிகரிப்பு!!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6327 கன அடியில் இருந்து 6896 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 10000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.89 அடியாக சரிந்துள்ளது.

தேர்தலுக்கு பிறகு அன்புமணி தானே எல்லம் பார்த்துக் கொள்ளப்போகிறார்: ராமதாஸ்

தேர்தலுக்கு பிறகு அன்புமணி தானே எல்லம் பார்த்துக் கொள்ளப்போகிறார். அன்புமணியிடம் இரு ஜாம்பவான்கள் பேசியும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. யார் சொன்னாலும் அன்புமணி கேட்க மாட்டார். முயலுக்கு 3 கால் என்கிறார் அன்புமணி; 4 கால் என ஒப்புக்கொண்டால் பிரச்சணை தீர்ந்துவிடும் என செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ராமதாஸ் கூறியுள்ளார்.

ஆந்திராவில் மாணவர்களின் தாயார் வங்கிக் கணக்குகளில் கல்வி உதவித் தொகை செலுத்தும் திட்டம் அமல்

ஆந்திர பிரதேசத்தில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தாயார் வங்கிக் கணக்குகளில் கல்வி உதவித் தொகையாக ஆண்டுக்கு ரூ. 15,000 செலுத்தும் புதிய திட்டம் அமலுக்கு வந்தது. இதன் மூலம் 67 லட்சம் மாணவர்கள் பயனடைவர் என தகவல் தெரிவித்தனர்.

என் கைகளைக் கொண்டே என் கண்ணை நான் குத்திக்கொண்டேன்: ராமதாஸ்

கைகளைக் கொண்டே என் கண்ணை நான் குத்திக்கொண்டேன். மோடி பதவியேற்பு விழாவுக்கு டெல்லி செல்லும் போது கட்சியை நான் பார்த்துக் கொள்கிறேன் என அன்புமனி கூறினார். 6-7 ஆண்டுகள் முன்பே கட்சியை கைப்பற்றும் எண்ணம் அன்புமணிக்கு இருந்திருக்கிறது. அன்று அமைதி காத்திருந்தார் அன்புமணிக்கு அதிகாரம் தானாக வந்திருக்கும் என ராமதாஸ் கூறினார்.

2026 தேர்தலில் அதிமுக போட்டியிடும் தொகுதி எண்ணிக்கையில் சரிபாதியில் பாஜக போட்டியிட வேண்டும்: அண்ணாமலை

2026 தேர்தலில் அதிமுக போட்டியிடும் தொகுதி எண்ணிக்கையில் சரிபாதியில் பாஜக போட்டியிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அதிமுக கூட்டணியில் பாஜக அடிப்படையில் தொகுதி பங்கீடு பெற்றால் கூட்டணி ஆட்சி நிச்சயம். அண்மையில் பாஜக பெற்ற ஓட்டு சதவீத அடிப்படையில் தொகுதி பங்கீடு தேவை என அண்ணாமலை கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 தர வேண்டும்: அரசுக்கு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை

நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 தர வேண்டும் என அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நெல் குவிண்டாலுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகையாக ரூ.1,180 வழக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெல் குவிண்டாலுக்கு ஒன்றிய அரசு வழங்கும் ரூ.2,320 உடன் சேர்த்து தமிழ்நாடு அரசு ரூ.3,500ஆக தர வேண்டும்.

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் குடியரசுத் தலைவர் மூலம் விளக்கம் கேட்ட ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!!

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் குடியரசுத் தலைவர் மூலம் விளக்கம் கேட்ட ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது; ஒன்றிய அரசின் நடவடிக்கை அரசியலமைப்பு சட்டத்தின்படி உச்சநீதிமன்றம் தீர்த்து வைத்த பிரச்சனையை மாற்றும் முயற்சி. பாஜகவின் சொல்படியே தமிழ்நாடு மக்களுக்கு எதிராக ஆளுநர் ரவி செயல்பட்டார் என்பதை ஒன்றிய அரசின் நடவடிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசின் நடவடிக்கை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை பலவீனப்படுத்தும் முயற்சி. அரசியலமைப்பு சட்டத்துக்கு இறுதி விளக்கம் அளிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கே உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

புழல் சிறைக்குள் வீசப்பட்ட பார்சலில் பீடி, சிகரெட்: போலீசார் விசாரணை!!

புழல் சிறைக்குள் வீசப்பட்ட பார்சலில் பீடி கட்டுகள், சிகரெட் பாக்கெட், லைட்டர் ஆகியவை இருந்தன. வெளியில் இருந்து புழல் சிறைக்குள் பார்சலை வீசியது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீவிரவாதத்தை ஒழிக்க எந்த எல்லைக்கும் செல்வோம் : ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ராணுவ வீரர்களை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்தார். காஷ்மீரில் பாதுகாப்பு தொடர்பாக அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதி உபேந்திரா திவேதி நேரில் ஆய்வு செய்தனர். இதனிடைய ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய ராஜ்நாத் சிங், “எதிரிகளை நாம் வீழ்த்திய விதத்தை அவர்களால் எப்போதும் மறக்க முடியாது. தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் இதுதான் பெரியது. பாதுகாத்துக் கொள்ள மட்டுமல்ல இந்தியாவுக்கு பதிலடியும் கொடுக்க தெரியும் என ஆபரேஷன் சிந்தூர் நிரூபித்துள்ளது.தீவிரவாதத்தை ஒழிக்க எந்த எல்லைக்கும் செல்வோம் என்றார்.

வக்ஃபு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்குகளின் விசாரணையை மே 20க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!!

வக்ஃபு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்குகளின் விசாரணையை மே 20க்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு ஒத்திவைத்தது. வக்ஃபு சட்டத்திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 100க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே வேன் கவிழ்ந்து 22 பேர் காயம்!!

கிருஷ்ணகிரி மாவட்டம் குந்துக்கோட்டை அருகே வேன் கவிழ்ந்து 22 பேர் காயம் அடைந்தனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. தாண்டியம் கிராமத்தை சேர்ந்த 22 பேருக்கும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய கோவிந்தா பாடல் நீக்கம்!!

டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய கோவிந்தா பாடல் நீக்கம் செய்யப்பட்டது. பக்தர்கள், அரசியல் கட்சிகள், தேவஸ்தான அறங்காவலர் குழுவினர் எதிர்ப்பை அடுத்து நீக்கம் செய்யப்பட்டது. சமூக ஊடகங்களில் இருந்தும் பாடலை விரைவில் நீக்க திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அவதூறு வழக்கு விசாரணைக்காக சீமான் ஏன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை?: நீதிமன்றம் கேள்வி

அவதூறு வழக்கு விசாரணைக்காக சீமான் ஏன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை? என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அடுத்த முறை ஆஜராவதாக கடந்த முறை கூறிய நிலையில் இன்று ஆஜராகாதது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதாக சீமான் மீது திருச்சி சரக டிஐஜி வருண்குமார் வழக்கு தொடர்ந்தார். சீமான் மீதான வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

சிப் பொருத்தப்பட்ட E-Passport அறிமுகம்!

இந்தியாவில் பயோமெட்ரிக் விபரங்கள் அடங்கிய E-Passport பயன்பாட்டை அமலுக்கு கொண்டுவந்தது வெளியுறவுத்துறை. E-Passport-ன் கடைசி பக்கத்தில் RFID சிப், ஆன்டெனா பொருத்தப்பட்டு தனிபட்ட தரவுகள், கை ரேகை, முக தரவு ஆகியவை டிஜிட்டல் என்கிரிப்ஷன் முறையில் பதிவுசெய்யப்படும். இதனால் விபரங்களை திருடவோ, மாற்றவோ முடியாது. இதனால் போலி பாஸ்போர்ட் மோசடிகள் தடுக்கப்படும், விமான நிலையங்களில் பாஸ்போர்ட் சரிபார்ப்பு நேரம், மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதரவற்ற குழந்தைகள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க அனுமதி!!

குழந்தைகள் நல மையங்களில் தங்கியுள்ள ஆதரவற்ற குழந்தைகளை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை இல்லாமல் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க அனுமதி அளித்துள்ளது. 843 குழந்தைகள் நல மையங்களில் தங்கியுள்ள 15,092 குழந்தைகள் பயன் பெறுவர்.

தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை செயலாளராக ஜெயகாந்தன் ஐஏஎஸ் நியமனம்!!

தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை செயலாளராக ஜெயகாந்தன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீர்வளத்துறை செயலாளராக இருந்த மங்கத் ராம் ஷர்மா பொதுப்பணித்துறைக்கு மாற்றப்பட்டார்.