ஷாட்ஸ்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த பேரையூரில் ஆட்டோ-லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த பேரையூரில் ஆட்டோ-லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பி.தொட்டியபட்டியில் ஆட்டோவும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகினர்.

கள்ளக்குறிச்சி அரசுப் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்!!

அரசுப் பள்ளி மாணவிகளிடம் தகாத முறையில் பேசிய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சமூக அறிவியல் ஆசிரியர் அன்பழகனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா உத்தரவிட்டார்.

அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்!!

கோயில் விழாக்களில் ஒவ்வொரு ஜாதியினருக்கும் ஒரு நாள் என ஒதுக்கீடு செய்யும் நடைமுறையை தவிர்க்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. பக்தர்கள், உபயதாரர்கள் அல்லது ஊர் பொதுமக்கள் என்ற அடிப்படையில் அடுத்த ஆண்டு முதல் விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.

திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது!!

 பெங்களூரிலிருந்து தனூர் வரை சென்ற சங்கமித்ரா விரைவு ரயில் சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே மெதுவாகச் சென்றபோது, ரயிலிலிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரௌஷன் தாஸ் என்பவரின் செல்ஃபோனை பறித்துச் சென்றுள்ளார். பிளம்ப் ராஜேஷ் (26) என்பவரைக் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆன்லைன் வர்த்தக முதலீடு எனக்கூறி ரூ.8 லட்சம் மோசடி!!

 சிங்காநல்லூரில் ஆன்லைன் வர்த்தக முதலீட்டில் அதிக லாபம் பார்க்கலாம் எனக்கூறி ரூ.8.65 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. பெண்ணிடம் வாட்ஸ் அப் மூலம் தொடர்புகொண்டு மோசடி செய்த கோவாவை சேர்ந்த ராமச்சந்திரன் (37) என்பவர் கைதாகினார். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

திண்டிவனம் அருகே இளைஞர் அடித்துக் கொலை!!

திண்டிவனம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஏழுமலை (23) என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். ஏழுமலையை இரும்புக் குழாயால் அடித்துக் கொன்ற அன்பரசன்(18) குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு!!

ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்த சிறுமி உள்பட 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தாமிரபரணி ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி கிளாடிஸ் (45), 5 வயது சிறுமி வினா பலியாகினர்.

மியான்மர், தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பு கொள்வதற்கான உதவி எண்களை அறிவித்தது அயலக தமிழர் நலத்துறை!!

மியான்மர், தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பு கொள்வதற்கான உதவி எண்களை அயலக தமிழர் நலத்துறை அறிவித்துள்ளது. 1800 309 3793 +91 80690 09901, +91 80690 09900 14 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

100 நாள் வேலை திட்டம் காந்தி பெயரில் உள்ளதால் அது மோடி அரசுக்குப் பிடிக்கவில்லை: அமைச்சர் துரைமுருகன்

0 நாள் வேலை திட்டம் காந்தி பெயரில் உள்ளதால் அது மோடி அரசுக்குப் பிடிக்கவில்லை என அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். 100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதி யாருடைய பணமும் கிடையாது; அது அரசின் பணம். 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியை வழங்க முடியாமல் ஒன்றிய அரசு ஏமாற்ற முடியாது. பாஜக, மோடி எனக் கூறி யாரும் ஓட்டு கேட்க முடியாது; அந்த அளவுக்கு மக்களுக்கு துரோகம் செய்துள்ளனர் என தெரிவித்தார்.

கால்பந்து போட்டி: மெட்ரோ ரயிலில் கட்டணமில்லா பயணம்!!

பிரேசில் லெஜன்ட்ஸ் – இந்தியன் லெஜன்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியை காண மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள நேரு மைதானத்தில் நாளை போட்டி நடைபெறுகிறது. போட்டிக்கான ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி செல்லலாம். போட்டிக்கான நுழைவுச் சீட்டுகளில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

சென்னையில் 100 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

சென்னையில் 100 டிகிரி வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவித்தது.

நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கிய 2 பேர் கைது!!

சோழவரம் அருகே ஆத்தூரில் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கிய வினித், முருகள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆதம்பாக்கத்தில் கைது செய்யப்பட்ட பார்த்திபன் என்பவர் அளித்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். போலீசாரின் சோதனையில் சோழவரம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மே 1-ம் தேதி முதல் ஏடிஎம் மூலம் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.23 கூடுதல் கட்டணம் வசூலிப்பு!!

மே 1-ம் தேதி முதல் ஏடிஎம் மூலம் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.23 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. ஏற்கனவே ரூ.21 வசூலிக்கப்பட்ட நிலையில் ரூ.23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆக்கபூர்வமான அரசியல் செய்யுங்கள், வீண் புரளி கிளப்ப வேண்டாம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆக்கபூர்வமான அரசியல் செய்யுங்கள், வீண் புரளி கிளப்ப வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்; சட்டம் – ஒழுங்கு சரியாக இருப்பதால்தான் தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகள் வந்து குவிகின்றன. தமிழ்நாட்டில் குற்றங்கள் அதிகரித்திருக்கிறதா – குறைந்திருக்கிறதா என்பதைப் புள்ளிவிவரங்கள் சொல்லும். கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலங்கள் போல் சாதி – மத மோதல்கள் நிகழ்ந்துள்ளனவா? குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகிறார்களா?. சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளைப் பூதாகரமாக்கி, மக்களைக் குழப்பவும் – திசைதிருப்பவும் எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன என முதல்வர் பதிவிட்டுள்ளார்.

எலைட் திட்டம்-விளையாட்டு வீரர்கள் எண்ணிக்கை உயர்வு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

எலைட் திட்டத்தில் பயன்பெறும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை 25ல் இருந்து 50ஆக உயர்ந்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். MIMS திட்டத்தில் பயன்பெறும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை 75ல் இருந்து 125ஆக உயர்ந்துள்ளது. CDS திட்டத்தில் பயன்பெறும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை 100ல் இருந்து 200ஆக உயர்ந்துள்ளது. திட்டங்களை செயல்படுத்த ஆண்டுதோறும் ரூ.38 கோடி நிதி ஒதுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

தாம்பரம் அருகே பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!!

தாம்பரம் அருகே மணிமங்கலத்தில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் உயிரிழந்தார். அரசு பள்ளியில் 6ம் வகுப்பு பயின்று வந்த மாணவன் தமிழரசு(12) மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இரும்பு பக்கெட்டில் வாட்டர் ஹீட்டர் போட்டுவிட்டு, தண்ணீர் சூடாகியதா என தொட்டுப்பார்த்தபோது மின்சாரம் பாய்ந்தது.

கூட்டணி பற்றி பேச இன்னும் நிறைய காலம் உள்ளது: அண்ணாமலை

கூட்டணி பற்றி பேச இன்னும் நிறைய காலம் உள்ளது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம் என டெல்லியில் அண்ணாமலை பேட்டியளித்தார். அப்போது, பாஜக யாருடன் கூட்டணி என்பது குறித்து தற்போது பேச வேண்டிய அவசியம் இல்லை. மைக் எடுத்து பேசி கைகாட்டி விட்டுப்போவதில்லை அரசியல்; களத்துக்கு வரவேண்டும் என மீடியா வெளிச்சத்துக்காக பிரதமர் குறித்து விஜய் பேசுகிறார் என்று அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

குணால் கம்ராவுக்கு இடைக்கால முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

குணால் கம்ராவுக்கு இடைக்கால முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவசேனாவை உடைத்து, பாஜக கூட்டணியில் இணைந்து ஏக்நாத் ஷிண்டே முதல்வரானதை விமர்சித்திருந்தார் குணால் கம்ரா. ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்தது தொடர்பான வழக்கில் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ராவுக்கு இடைக்கால முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

எழும்பூரில் ரயில்வே கட்டடத்தில் தீ விபத்து!!

எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எழும்பூர், வேப்பேரியில் இருந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

டெஸ்ட் தொடரிலும் ரோஹித் ஷர்மாவே கேப்டனாக நீடிப்பார் என தகவல்!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ரோஹித் ஷர்மாவே கேப்டனாக நீடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. முதல்முறையாக WTC இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெற தவறிய நிலையில், கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் நீக்கப்படலாம் என்ற செய்திகள் உலா வந்தன.