ஷாட்ஸ்

தமிழ்நாட்டிற்கு இன்று ஆரஞ்சு அலர்ட் : இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பி.ஆர்.நாயுடு தலைமையில் வார் ரூம் அமைத்தது காங்கிரஸ்!!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பி.ஆர்.நாயுடு தலைமையில் வார் ரூம் அமைத்தது காங்கிரஸ். இணை தலைவராக வசந்தராஜ், துணை தலைவர்களாக கே.எஸ்.குமார், நாபில் அகமது ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் சண்டிகர் மசோதா விவகாரத்தில் பின் வாங்கியது மத்திய அரசு!!

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் சண்டிகர் மசோதா விவகாரத்தில் மத்திய அரசு பின் வாங்கியுள்ளது. சண்டிகர் யூனியன் பிரதேசத்தை கொண்டு வரும் மசோதா தாக்கல் செய்யப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 1966ல் பஞ்சாபில் இருந்து ஹரியானா பிரிந்தபோது இரு மாநிலங்களின் பொது தலைநகராக சண்டிகர் உள்ளது. 1984ல் பஞ்சாப் ஆளுநரின் கட்டுப்பாட்டின் கீழ் சண்டிகர் கொண்டு வரப்பட்டது.

பஞ்சாப் மாநில குரு தேக் பக்தூரின் 350வது ஆண்டு விழாவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

பஞ்சாப் மாநில குரு தேக் பக்தூரின் 350வது ஆண்டு விழாவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம் எழுதி உள்ளார். மேலும் குரு தேக் பகதூரின் துணிச்சல், கருணை, மதச் சுதந்திரம் ஆகிய உன்னத லட்சியங்களுக்கு மரியாதை செலுத்துவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடலாடி, காயல்பட்டினத்தில் தலா 4 செ.மீ. மழை பதிவு!!

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடலாடி (ராமநாதபுரம்), காயல்பட்டினத்தில் (தூத்துக்குடி) தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானமாதேவி, சின்னக்கல்லாறு, மயிலாடுதுறை உள்ளிட்ட 7 இடங்களில் 3 செ.மீ. மழை பெய்துள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நண்பகல் 1 மணிக்குள் மழைக்கு வாய்ப்புள்ளது.

புதுச்சேரியில் பெண்களின் வேலை நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டித்து அறிக்கை வெளியீடு!!

புதுச்சேரியில் பெண்களின் வேலை நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பெண்கள் இரவு பணியில் 7 மணி வரை மட்டுமே பணி செய்ய அனுமதித்த நிலையில் தற்போது இரவு 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பெண்களின் வேலைவாய்ப்பு, பணி நிலைகளில் உள்ள சில கட்டுபாடுகளை தளர்த்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ளதால் மக்கள் அவதி!!

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ளதால் மக்கள் அவதிகுள்ளாகி உள்ளனர். காற்றின் தரக் குறியீடு 200 என்ற மோசமான நிலையில் உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,278 கனஅடியாக சரிவு!!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,456 கனஅடியில் இருந்து 6,278 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.88 அடியாக சரிந்துள்ளது; நீர் இருப்பு 87.05 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக விநாடிக்கு 15,400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. டெல்டா பாசனத்துக்காக 15,000 கனஅடி நீரும் கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக 400 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பெண் பாதுகாப்பில் எந்த சமரசத்துக்கும் இடம் தராது: ஆர்.எஸ்.பாரதி

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பெண் பாதுகாப்பில் எந்த சமரசத்துக்கும் இடம் தராது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். திமுக அரசுக்கு களங்கம் கற்பிக்கால் என நினைத்து எதிர்க்கட்சிகள் அவதூறு செய்கின்றன. பெண்களின் நலனையே முதன்மை நோக்கமாக கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமி வழியில் அன்புமணி, நயினார் நாகேந்திரனும் சுயலாபத்துக்காக அரசியல் செய்கின்றனர் என அவர் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி விளையாடுவார்: சிஎஸ்கே அணியின் சிஇஓ உறுதி

அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி விளையாடுவார் என்று சிஎஸ்கே அணியின் சிஇஓ உறுதி அளித்துள்ளார். தற்போதைக்கு தோனி ஓய்வு பெறும் திட்டம் இல்லை; அவரிடம் கேட்டு சொல்கிறேன் என்று சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் நாடகங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு: தமிழ்நாடு அரசு

கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் நாடகங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கேளிக்கை வரி செலுத்துவதில் இருந்து விலக்களித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் வரிவிலக்கு உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

திருச்செந்தூரில் கடல் நீர் உள்வாங்கியது!!

திருச்செந்தூரில் கடல் நீர் 2வது நாளாக சுமார் 80 அடி தூரத்துக்கு உள்வாங்கி காணப்படுகிறது. கடல் நீரில் உள்வாங்கியதால் பச்சை நிற பாசிகள் படிந்த பாறைகளில் அமர்ந்து பக்தர்கள் நீராடினர்.

அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி புதிய கட்டுப்பாடு!!

கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் அதிமுகவினர் எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். கூட்டணி தானாக நடக்கும்; கவலை வேண்டாம் என மாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அதிமுக அழைப்பை நிராகரித்தது தவெக!!

தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் அதிமுகவின் கூட்டணி அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. 2026 தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட அனைத்து முடிவுகளை எடுக்க விஜய்க்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுகவும், பாஜகவும் மாறி மாறி கூட்டணிக்கு அழைத்த நிலையில் விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என தவெக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தவெக தங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என்று அதிமுக, பாஜக தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தன.

தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 7-11 செ.மீ. வரை கனமழை பெய்ய வாய்ப்பு என்பதால் நவ.5,6,7,8 ஆகிய தேதிகளில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு -வானிலை மையம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வாக்குத் திருட்டால் ஹரியானா தேர்தல் முடிவு மாறியது: ராகுல் காந்தி

ஹரியானா தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாலேயே காங்கிரஸ் வெற்றி பெற முடியவில்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஹரியானாவில் வழக்கத்துக்கு மாறாக தபால் ஓட்டுகள் அனைத்துமே வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளுக்கு எதிராக இருந்தன. அனைத்து கருத்துக் கணிப்புகளும் காங்கிரசுக்கே வெற்றி என கூறின. மோசடிகள் நடக்காமல் இருந்திருந்தால் ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும் என்றும் கூறினார்.

டி.என்.ஏ. பரிசோதனைக்கு தயார்: மாதம்பட்டி ரங்கராஜ்

மிரட்டலின்பேரில் ஜாய் கிறிசில்டாவை 2வது திருமணம் செய்ததாக மாதம்பட்டி ரங்கராஜ் விளக்கம் அளித்தார். மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை. மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்வேன். டி.என்.ஏ. சோதனை மூலம் குழந்தை என்னுடையது என்று நிரூபித்தால் கவனித்துக் கொள்வேன். மகளிர் ஆணைய விசாரணையின்போது ஜாய் கிறிசில்டா மாதம் ரூ.1.5 லட்சம் பராமரிப்பு தொகை வேண்டும் என்று கேட்டார். தனது பிஎம்டபிள்யூ காருக்கு ரூ.1.25 லட்சம் இஎம்ஐ செலுத்த வேண்டும் என்றும் ஜாய் கிறிசில்டா கேட்டிருந்தார்ஜாய் கிறிசில்டாவின் கோரிக்கையை விசாரணையின்போது நான் ஏற்கவில்லை. டிஎன்ஏ பரிசோதனையை நான் ஒருபோதும் மறுக்கவில்லை என்று கூறினார்.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.90,000க்கு விற்பனை!!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.11,250க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.165க்கு விற்பனையாகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடிதம்!!

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளார். அதில்; தேர்தல் ஆணையத்திடம் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குவதாகக் கூறும் அதிமுகவின் பிரிவு, உண்மையான அதிமுக அல்ல. அதிமுக கட்சியின் உண்மை நிலை என்னவென்பதை நிரூபிக்க ஆணையத்திடம் செங்கோட்டையன் அவகாசம் கோரியுள்ளார்.

கர்நாடகாவில் மிதமான நிலநடுக்கம்!!

கர்நாடகா மாநிலம் விஜயபுரத்தில் காலை 7.49 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5 கிலோ மீட்டர் ஆழத்தில் பூமிக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவாகியுள்ளது.