சென்னை பாண்டி பஜாரில் இன்று மோடி ரோடு ஷோவுக்கு 20 நிபந்தனையுடன் அனுமதி: 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

சென்னை பாண்டி பஜாரில் இன்று மோடி ரோடு ஷோவுக்கு 20 நிபந்தனையுடன் அனுமதி: 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு


பிரதமர் மோடியின் இன்றைய சுற்றுப்பயண விவரம்: பிரதமர் மோடி இன்று காலை 11.15க்கு உ.பி. மாநிலம் பிலிபிட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் அங்கிருந்து சென்று, மத்திய பிரதேசம் பாலாகாட்டில் பிற்பகல் 2.45 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகிறார். மாலை 6.30க்கு பாண்டி பஜார் ரோடு ஷோவில் கலந்துகொள்கிறார். இரவு கிண்டி ராஜ்பவனில் தங்குகிறார். அடுத்த நாள் புதன்கிழமை காலை 10.30க்கு வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பேசுகிறார். பிற்பகல் 1.45க்கு நீலகிரி வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மேட்டுப்பாளையம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் மகாராஷ்டிரா சென்று ராம்டெக்கில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

Read MoreRead Less
Next Story