தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மேற்படிப்புக்கு வழிகாட்டும் ‘கல்லூரி கனவு நிகழ்ச்சி’ இன்று முதல் தொடக்கம்

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மேற்படிப்புக்கு வழிகாட்டும் ‘கல்லூரி கனவு நிகழ்ச்சி’ இன்று முதல் தொடக்கம்

Exam

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு செல்ல காத்திருக்கும் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டும் நிகழ்வாக ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டும் நடந்து முடிந்தது. அந்த வகையில் பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவு வெளியான நிலையில், அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி இன்று முதல் தொடங்கி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பிரத்தியேகமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட இருக்கிறது.

Read MoreRead Less
Next Story