பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல்: நூற்றுக்கணக்கானோர் கைது

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல்: நூற்றுக்கணக்கானோர் கைது

சென்னை எழும்பூரில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. திருச்சியில் தேசிய தென்னந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யக்காண்ணு தலைமையிலான விவசாயிகள் நேற்று மதியம் கோட்ைட ரயில் நிலையம் தண்டவாளத்திலேயே மாரிஸ்தியேட்டர் பாலம் வரை 1 கிலோமீட்டர் தூரம் ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு நடந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகள் தண்டவாளத்தின் குறுக்கே படுத்தும், அமர்ந்தும் கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

Read MoreRead Less
Next Story