9-வது மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை - இந்தியா நியூசிலாந்துடன் நாளை மோதல் !!

9-வது மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை - இந்தியா நியூசிலாந்துடன் நாளை மோதல் !!

மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை

9-வது மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது.

போட்டிகள் துபாய் மற்றும் சார்ஜாவில் நடக்கிறது. வருகிற 20-ந்தேதி வரை நடக்கும் இப்போட்டியில் 10 அணிகள் கலந்துள்ளனர்.

அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். மொத்தம் 23 ஆட்டங்கள் நடக்க உள்ளது.

இந்த நிலையில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் நாளை நியூசிலாந்துடன் மோதுகிறது. இப்போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு துபாயில் நடக்கிறது.

Tags

Next Story