அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் !! இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு பாதுகாப்பு தீவிரம் !!

அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் !! இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு பாதுகாப்பு தீவிரம் !!

டி20

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

9-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில நடக்கிறது.

இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.

இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது.பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் 9-ம் தேதி நியூயார்க்கில் நடக்கிறது.

இந்நிலையில், மைதானத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஐஎஸ் ஆதரவு அமைப்பு, மைதானத்தில் புகுந்து தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.

இதன் எதிரொலியாக இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறும் நியூயார்க்கில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் மைதானம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story