மருதுபாண்டியர்கள் குருபூஜை கொண்டாடப்பட்டது

மருதுபாண்டியர்கள் குருபூஜை கொண்டாடப்பட்டது

மருதுபாண்டியர்கள் குருபூஜை

காளையார்கோவிலில் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா சிறப்பாக கொண்டாடப்படப்பட்டது
வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு வீரமரணமடைந்த மாமன்னர் மருதுபாண்டியர்களின் குருபூஜை விழாவனது ஆண்டுதோறும் அக்.27 ம் தேதி காளையார்கோவிலில் அவர்கள் நினைவிடத்தில் அனுசரிக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு எஸ்.பி அரவிந்தன் தலைமையில் 3 எஸ்.பிக்கள் 6 ஏ.டி.எஸ்.பிக்கள், 20 டி.எஸ்.பி, 40 இன்ஸ்பெக்டர்கள் 360 எஸ்.ஐக்கள் 1024 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுள்ள நிலையில் காளையார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் பால்குடம் சுமந்து வந்து நினைவிடத்தில் நேர்த்திகடன் செலுத்தியதுடன், கோவை காமாட்சிபுரம் ஆதீணம் தலைமையில் குருபூஜை விழாவானது துவங்கியது. இதனை தொடர்ந்து பல்வேறு சமுதாய மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Tags

Next Story