தீபாவளி முன்பதிவு: சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்!!

train ticket
நடப்பாண்டு தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் மாதம் 20ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பயணிகள் கடைசி நேர அலைச்சலை குறைக்கும் வையில் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்னதாவே தொடங்கிவிடும். ஆனால் தற்போது 60 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யப்படுகிறது. அதன்படி இன்று தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. இந்த ஆண்டு திங்கள் கிழமை தீபாவளி பண்டிகை என்பதாலும், அதற்கு முன்னதாக சனி , ஞாயிறு 2 நாட்களும் வார இறுதி நாட்கள் என்பதாலும் பெரும்பாலானோர் வெள்ளிக்கிழமை ( அக்.17) அன்றே சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கிவிடுவர். ஆகையால் டிக்கெட் முன்பதிவும் அக்டோபர் 16ம் தேதியில் (வியாழக்கிழமை) இருந்து தொடங்குகிறது. அதன்படி, அக்.16ம் தேதிக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. தொடர்ந்து அக்டோபர் 17ம் தேதி சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புவோருக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (ஆக.18) காலை 8 மணிக்கு தொடங்கியது. டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தன. ஒரே நேரத்தில் பலரும் முன்பதிவு செய்ய முயற்சித்ததால், இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது சிரமங்களை சந்திக்க நேரிட்டது. அத்துடன் பலரும் டிக்கெட் முன்பதிவு முடிந்த பின்னர் காத்திருப்பு பட்டியலுக்கு சென்றனர்.
