ஆம்னி பஸ்களில் அதிக கட்டணமா? - புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு!!

தமிழ்நாடு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் வார விடுமுறையை முன்னிட்டு (12.01.2026 முதல் 18.01.2026 வரை) பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் அதனைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு சிறப்புக்குழு அமைக்கப்பட்டு அதிகப்படியான கட்டணம் வசூல் செய்யும் மற்றும் அனுமதிக்குப்புறம்பாக இயங்கும் ஆம்னி பேருந்துகளை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிக அளவில் தங்களது சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதால் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வருவதை தொடர்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கீழ்காணும் எண்கள் மூலம் தொலைப்பேசி வாயிலாகவோ, வாட்ஸ் ஆப் மூலம் குறுஞ்செய்தி அல்லது குரல் பதிவாகவோ புகார் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது." என தெரிவித்துள்ளது.
புகார் அளிப்பதற்கான தொடர்பு எண்கள்
ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட்டால் பொதுமக்கள் புகார் அளிக்கத் தனித்தனி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:
தலைமையகம் (சென்னை): 1800 425 6151.
சென்னை மண்டலங்கள்: 99442 53404 (வடக்கு), 97905 50052 (தெற்கு).
பிற மாவட்டங்கள்: மதுரை (90953 66394), கோயம்புத்தூர் (91235 93971), விழுப்புரம் (96773 98825), வேலூர் (98400 23011), சேலம் (78456 36423), ஈரோடு (80569 40040), திருச்சிராப்பள்ளி (90660 32343), விருதுநகர் (90257 23800), திருநெல்வேலி (96981 18011) மற்றும் தஞ்சாவூர் (95850 20865). மேற்கண்ட எண்களுக்குத் தொலைபேசி வாயிலாகவோ அல்லது வாட்ஸ்ஆப் (WhatsApp) மூலம் குறுஞ்செய்தி மற்றும் குரல் பதிவாகவோ பொதுமக்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பிரத்யேக கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் என்றும், பயணிகளுக்கு வழிகாட்ட பேருந்து நிலையங்களில் பல்வேறு இடங்களில் தகவல் மையங்கள் (May I Help You) அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூட்ட நெரிசலைத் தவிர்த்து, பாதுகாப்பாகப் பயணம் செய்ய முன்பதிவு வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்வது எப்படி?
அரசு பேருந்துகளில் பயணிக்க விரும்பும் பொதுமக்கள் முன்பதிவு செய்யுமாறு அரசுப் போக்குவரத்து கழகம் கேட்டுக்கொண்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்தால், முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்துக் கழகங்கள் கணித்து அதற்கேற்ப பேருந்து சேவையை வழங்க ஏதுவாகும். எனவே, பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மொபைல் ஆப் (Mobile App) Android / I phone கைபேசி மூலமாகவும் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
