இன்று 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு!!

rain
வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று (ஜூலை 24) காலை 05.30 மணியளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில்(இன்று) அழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, பின்னர் மேற்கு - வடமேற்கு திசையில் , மேற்குவங்கம்- வடக்கு ஒரிசா கடலோரப்பகுதிகளை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும் என்று கணிக்ககப்பட்டுள்ளது. இதேபோல் மகாராஷ்டிரா - கேரளா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளிலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் , இடி - மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் , திருநெல்வேலி மாவட்டங்களில் மலை பகுதிகளி, ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. அத்துடன் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
