அரக்கோணம்: காட்டில் திடீர் தீ விபத்து!

அரக்கோணம்: காட்டில் திடீர் தீ விபத்து!

தீ விபத்து

சோளிங்கர் ரோடு பகுதியில் உள்ள காட்டில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் சோளிங்கர் ரோட்டில் உள்ள காட்டுப் பகுதியில் திடீரெனத் தீப்பற்றி எரிவதாக அரக்கோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பிலான காடு எரிந்து நாசமாகியது. மேலும் தீ விபத்து குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story