அமமுக, பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

அமமுக, பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தேர்தல் பிரச்சாரம்
அரக்கோணம் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பிரச்சாரம் குறித்து அமமுக மற்றும் பாமக நிர்வாகிகளும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் தொகுதி பா.ம.க. வேட் பாளர் பாலுவை வெற்றிபெறச்செய்ய தேர்தல் பிரசாரம் குறித்த அ.ம.மு.க.-பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நெமிலியை அடுத்த சம்பத்துராயன்பேட்டை பகுதியில் நடந்தது. கூட்டத்துக்கு அ.ம.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ.சி.மணிவண்ணன் தலைமை தாங்கினார். அரக்கோணம் தொகுதி பா.ம.க. தேர்தல் பொறுப்பாளர் தீனதயாளன், அ.ம.மு.க. மாவட்ட அவைத்தலைவர் பாண்டுரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.எல்.ஏ.வான அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் என்.ஜி.பார்த்திபன் கலந்துகொண்டு பேசுகையில்,

வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியினருடன் இணைந்து செயல்படவேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் அனைத்து வீடுகளுக்கும் சென்று வாக்குகள் சேகரிக்க வேண்டும். பூத்கமிட்டி முகவர்கள் விழிப்புடனும், வார்டுக்குள் உள்ள வாக்காளர்கள் அனைவரையும் தெரிந்தும் வைத்திருக்க வேண்டும் என்றார்.

Tags

Read MoreRead Less
Next Story