வாயால் வடை சுடும் அண்ணாமலை - அமைச்சர் கீதா ஜீவன்

வாயால் வடை சுடும் அண்ணாமலை -  அமைச்சர் கீதா ஜீவன்

அமைச்சர் கீதா ஜீவன், அண்ணாமலை

மத்திய அரசு திட்டம் எது?, மாநில அரசு திட்டங்கள் எது ? என்று தெரியாமால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வருகின்றார். அவர் வாயால் வடை சுடுகின்றார் அதான் உண்மை என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைத்து நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருத்தை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசும்போது , தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுகவை குறை சொல்வதே வேலையா போச்சு அப்போது தான் அவரை பற்றிய செய்திகள் வரும். அதனால் அப்படி பேசி வருகின்றார். மத்திய அரசின் திட்டம் எது மாநில அரசின் திட்டம் எது என்று தெரியாமல் பேசி வருவதாக தெரிவித்தார். மேலும் தோல்வி பயத்தில் அண்ணாமலை உலறி வருகின்றார்.என்றார். பேசுவது உண்மையா பொய்யா என்று கூட தெரியாமல் வாய்க்கு வந்ததெல்லாம் பேசி வருகின்றார். உண்மையே பேசுவதில்லை என்றார். எல்லோரும் நம்மை கவனிக்க வேண்டும் என்று எதை எதையோ பேசுகிறார். வாயால் வடை சுட்டு கொண்டு வருகின்றார் வாயால் வடை சுடுகின்றார் என்றால் அது அண்ணாமலை-க்குதான் பொருத்தமாக இருக்கும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story