திருமுருகன் காந்தி- பாஜகவினர் இடையே வாக்குவாதம்

திருமுருகன் காந்தி- பாஜகவினர் இடையே வாக்குவாதம்

வாக்குவாதம் 

கோவையில் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது பாஜகவினர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக தினேஷ் என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நேற்று ஒண்டிபுதூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த நிலையில் அந்த பகுதிக்கு வந்த பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் வந்த கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை மிரட்டவும் செய்தனர். அதற்கு பதிலடியாக திருமுருகன் காந்தியும் பா.ஜ.கவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இரு தரப்பினை சேர்ந்தவர்களும் மாறி மாறி முழக்கங்கள் எழுப்பி கொண்ட நிலையில் காவல்துறையினர் அவர்களை சமரசப்படுத்தினார்

.பாரத் மாதா கி ஜே என பாஜகவினரும்,ஜெய் பீம், பெரியார் வாழ்க தமிழ்நாடு தமிழருக்கு என்ற முழக்கங்களுடன் மே 17 இயக்கத்தினரும் முழக்கம் எழுப்பினர்.மே 17 இயக்கத்தினரின் பிரச்சாரத்தை பாஜக தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.மே 17 இயக்கத்தினர் உரிய அனுமதி பெற்று பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் பாஜகவினர் பிரச்சாரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே காவல்துறையினர் மே 17 இயக்கத்தினர் அணிந்திருந்த டீசர்ட்டுகளை கழட்டுமாறு கூறவே போலீசாருக்கும் மே 17 இயக்கத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story