எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பு பேனர்கள் கிழிப்பு

எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பு  பேனர்கள் கிழிப்பு

கிழிக்கப்பட்ட அதிமுக பேனர் 

சீர்காழியில் வியாபாரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பு பேனர்களை கிழித்த இட்லி கடைக்காரரை போலீசார் தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நாளை (18ம் தேதி) நடைபெற உள்ள அதிமுக உறுப்பினர்கள் சேர்க்கும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது, இதற்காக சீர்காழி நகர் முழுவதும் அதிமுகவினர் சாலை ஓரம் முழுவதும் பேனர்கள் வைத்துள்ளனர் இதனால் சாலையோரம் தள்ளுவண்டி கடை வைத்துள்ளவர்களுக்கு இடையூறாக உள்ளது,இந்நிலையில் சீர்காழியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் சாலையோரம் தள்ளு வண்டியில் இட்லி கடை நடத்தி வருகிறார் இந்த பேனரால் தனது கடை நடத்த முடியாமல் இடையூறு ஏற்பட்டதனால் கடையை மூடி உள்ளார் .

இதனால் தனது வாழ்வாதாரம் இரண்டு நாட்களாக வருவாய் இழப்பு இழந்துள்ளதால் ஆத்திரமடைந்த ராஜேஷ் அதிமுகவின் பேனர்களை சரமாரியாக கிழித்து போட்டுள்ளார் இதனை அறிந்த அதிமுகவினர் பேனர்கள் கிழிக்கப்பட்ட இடத்தில் ஒன்று கூடிதல் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது இது குறித்து சீர்காழி காவல் நிலையத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கூட்டத்தை கலைத்து விட்டு பின்னர் இட்லி கடை போடுவதற்காக வைத்துள்ள தள்ளு வண்டியை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். பேனரை கிழித்த ராஜேஷை தேடி வருகின்றனர்

Tags

Read MoreRead Less
Next Story