தமிழகத்தில் தேர்தல் சமூகமாக நடந்தது : சத்ய பிரதா சாகு பேட்டி

தமிழகத்தில் தேர்தல் சமூகமாக நடந்தது  : சத்ய பிரதா சாகு பேட்டி

பைல் படம்

தேர்தலில் சிறிய அளவிலான பிரச்சனைகள் மட்டுமே வந்தது தமிழகத்தில் சமூகமாக தேர்தல் முடிந்தது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.

18 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கான நேரம் முடிவுற்ற நிலையில், தமிழகத்தில் 6 மணி வரை பதிவான வாக்கு சதவீதம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு பேட்டி அளித்தார். அப்போது பேசியவர், தமிழகத்தில் தேர்தல் சுமூகமாக நடைபெற்றது. 3 மணிக்கு மேல் அதிகப்படியானவர்கள் வாக்கு செலுத்த வருகை தந்தனர். கடந்த முறை 7 மணி நிலவரத்தில் பெற்ற வாக்கு பதிவை விட இம்முறை கூடுதலாக பதிவாகி உள்ளது.

தபால் வாக்குகள் சேர்க்காமல் மத்திய சென்னை-67.35% தென் சென்னை- 67.82% வட சென்னை -69.26% அளவுக்கு வாக்கு பதிவாகி உள்ளது. சிறிய அளவான பிரச்சனைகள் மட்டுமே வந்தது, அதுவும் தீர்த்து வைக்கப்பட்டது. வரும் காலத்தில் வாக்கு சாவடிக்கு போக்கும் முன், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என ஆய்வு செய்த பின் வாக்களிக்க செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

Tags

Read MoreRead Less
Next Story