53 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை!

53 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை!

தங்கம் விலை

ஏப்ரல் மாதம் முதல் நாளில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த மாதம் 28-ந்தேதி சவரன் விலை ரூ.50 ஆயிரத்தை எட்டியது.

ஏப்ரல் 3ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் 840 ரூபாய் உயர்ந்து, 52,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

கிராமுக்கு ரூ.105 அதிகரித்து ரூ.6,615 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு 2ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.87-க்கும் பார் வெள்ளி ரூ.87,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags

Read MoreRead Less
Next Story