திருச்சுழி மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழா துவக்கம்

திருச்சுழியில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திருச்சுழி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் மாசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி இன்று முதல் 10 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக அம்மன் சன்னதிக்கு முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக, யாகசாலை வேள்வி பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் இன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ள இந்த மாசித்திருவிழாவானது ஒவ்வொரு வருடமும் திருச்சுழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும், ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி ரிஷப வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார்

. இதனையடுத்து வரும் பிப்ரவரி 23ம் தேதி மாசிப் பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக, இன்று நடைபெற்ற கொடியேற்றம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீமாரியம்மனைத் தரிசனம் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story