காசநோயாளிகளுக்கு தலா 500 கிராம் சத்துமாவு பாக்கெட்டுகளை மேயர் பிரியா வழங்கினார்

காசநோயாளிகளுக்கு தலா 500 கிராம் சத்துமாவு பாக்கெட்டுகளை மேயர் பிரியா வழங்கினார்

காசநோயாளிகளுக்கு சத்துமாவு 

தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காசநோயாளிகளுக்கு தலா 500 கிராம் சத்துமாவு பாக்கெட்டுகளை மேயர் பிரியா வழங்கினார்.
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட காசநோயாளிகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்திடும் வகையில், தன்னார்வலர் பங்களிப்புடன் 383 காசநோயாளிகளுக்கு தலா 500 கிராம் சத்துமாவு பாக்கெட்டுகளை மேயர் ஆர். பிரியா அவர்கள் இன்று (11.03.2024) தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மண்டலக்குழுத் தலைவர் நேதாஜி யு. கணேசன், மாமன்ற உறுப்பினர்கள் ரேணுகா, விஜயலட்சுமி, மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story