ஜல்லிக்கட்டு நடத்த முகூர்த்தக்கால் நடும் விழா

ஜல்லிக்கட்டு நடத்த முகூர்த்தக்கால் நடும் விழா
முகூர்த்தக்கால் நடும் பொழுது எடுத்த படம்
நாமக்கல் மாவட்டம், சால பாளையம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு முகூர்த்தக்கால் விழாவில் திரளான பொதுமக்கள், மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
எருமப்பட்டி அருகே உள்ள ரெட்டிபட்டி ஊராட்சி சால பாளையம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முகூர்த்தக்கால் நடுவிழா நடைபெற்றது. விழாவில் ஜல்லிக்கட்டு விழா குழு தலைவர் ராஜா முன்னாள் நாமக்கல்சட்டமன்ற உறுப்பினர் கே கே பி பாஸ்கர், தேவி ஸ்ரீ மோகன், மயில்சுந்தரம் .மற்றும் அமெரிக்க செல்வம், சேந்தமங்கலம் கவுன்சிலர் ரமேஷ் ,அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் , பவித்திரம் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன் , பொட்ரெட்டிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் துளசிராமன் , மேட்டுப்பட்டி ஊராட்சி மன்றதலைவர் சரவணன் ,அலங்காநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் , முத்தக்காபட்டி ஊராட்சி மன்ற தலைவர் அருள் ராஜா ,ரெட்டிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் அன்புமணி ராஜா , இன்ஜினியர் செல்வகுமார் , ஜல்லிக்கட்டு பேரவை சங்கத்தைச் சேர்ந்த மேலூர் குணா ,முத்து , ராஜபாளையம் சசி , மீன்சுருட்டி சுரேஷ் மற்றும் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் பூஜையில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story