வேளச்சேரியில் வாக்கு செலுத்திய சத்ய பிரதா சாகு

இளைஞர்கள், புது வாக்காளர்கள் நிறைய ஆர்வமாக வருகிறார்கள். வாக்கு பதிவு சதவிகிதம் அதிகரிக்கும். வாக்காளர் அடையாள அட்டை உள்ள அனைவருக்கும் வாக்கு உண்டு. தேர்தல் செயலியில் பார்த்தால் தங்களுக்கு எந்த வாக்குச்சாவடி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரியும் என தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.

சென்னை வேளச்சேரி பகுதியில் தனது வாக்கினை செலுத்திய பின் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, செய்தியாளர்களை சந்தித்து பேசியது, அனைத்து இடங்களிலும் நல்லபடியாக வாக்கு பதிவு செல்கிறது. 3,4 இடங்களில் மெஷின் பழுது ஏற்பட்டது, ஆனால் அவையும் சரி செய்யப்பட்டது. மிக பதற்றமான/ மிக மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்காணிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட எஸ்பி சோதனை செய்து வருகின்றனர்.

அங்கெல்லாம் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இளைஞர்கள், புது வாக்காளர்கள் நிறைய ஆர்வமாக வருகிறார்கள். வாக்கு பதிவு சதவிகிதம் அதிகரிக்கும். வாக்காளர் அடையாள அட்டை உள்ள அனைவருக்கும் வாக்கு உண்டு .வாக்குச்சாவடிகள் முன்பின் இருக்கலாம். தேர்தல் செயலியில் பார்த்தால் தங்களுக்கு எந்த வாக்குச்சாவடி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிய வரும் என்றார்.

Tags

Read MoreRead Less
Next Story