சிவகாசி பட்டாசு ஆலை விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு

சிவகாசி அருகே கடந்த மே மாதம் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான சுதர்சன் பட்டாசு ஆலையில் கடந்த மே மாதம் 9-5-2024 தேதி நடந்த பயங்கர வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

மேலும் சிவகாசி ரிசர்வ் லைன் மாரீஸ்வரன் மனைவி மல்லிகா(35), மத்தியசேனையை சேர்ந்த செல்வம் மனைவி இந்திரா(48) ஆகியோர் உட்பட 14 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மல்லிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அதேபோல் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திரா சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார். இதையடுத்து பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

Tags

Next Story