கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடும் நடவடிக்கை - இபிஎஸ் வலியுறுத்தல்

கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடும் நடவடிக்கை - இபிஎஸ் வலியுறுத்தல்

எடப்பாடி பழனிசாமி

கள்ளச்சாராயத்தை ஒழிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசுக்கு கண்டனங்களை தெரிவிப்பதோடு, கள்ளச்சாராயத்திற்கு எந்த பெயர் இருந்தாலும் அதனை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 5 பேர் உயிரிழந்ததாகவும் 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வருகின்ற செய்திகள் கவலையளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் , வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து, இந்த விடியா திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுவதை தொடர்ச்சியாக தான் சுட்டிக்காட்டி வந்தும், இதனால் ஏற்கனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் கூட கள்ளச்சாராயத்தை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத விடியா திமுக அரசுக்கு தனது கடும் கண்டனங்களை தெரிவிப்பதாகவும் பதிவிட்டுள்ளவர். "கள்ளச்சாராயம் இல்லை- மெத்தனால்" என்று சொன்னது போல மக்கள் வாழ்க்கை விஷயத்தில் வார்த்தை விளையாட்டு விளையாடாமல், கள்ளச்சாராயத்திற்கு எந்த பெயர் இருந்தாலும் அதனை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story