பாஜகவில் பிரச்சனை இல்லை: தமிழிசை சவுந்தரராஜன்

பாஜகவில் பிரச்சனை இல்லை: தமிழிசை சவுந்தரராஜன்

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

பாஜகவில் பிரச்சனை இல்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைமை இன்றி தடுமாறுவதாக கூறப்பட்ட நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 3 மாதம் படிக்க சென்றுள்ளார். கட்சியில் ஒரு பிரச்சனையும் இல்லை. அண்ணாமலை வரும் வரை பெரிய நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம். உறுப்பினர் சேர்க்கையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என மேலிடம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாமலை வந்த பின்னர் பெரிய நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story