நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல் இது - கனிமொழி

நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல் இது - கனிமொழி

வாக்கு செலுத்திய கனிமொழி எம்பி

இது நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல், ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய, அரசியல் சட்டத்தை காப்பாற்ற வேண்டிய தேர்தல். எனவே, அனைவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். அந்தத் தெளிவுடன், உணர்வுடன் வாக்களிக்க வேண்டும் என வாக்கு செலுத்திய பின் கனிமொழி தெரிவித்தார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளருமான கனிமொழி கருணாநிதி, அவரது தாயார் ராஜாத்தி அம்மாளுடன் வந்து வாக்களித்தார்.

திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி தனது தாயார் ராஜாத்தியுடன் மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு காலை 8:45 மணி அளவில் வந்தார். அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் வரிசையில் நிற்கவைக்கப்பட்டனர். அப்போது கனிமொழியுடன் வாக்காளர்கள் பலரும் புகைப்படம் எடுத்தும் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர். அனைவருக்கும் சிரித்தவாறு கனிமொழி ஒத்துழைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி: ”இது நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல், ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய, அரசியல் சட்டத்தை காப்பாற்ற வேண்டிய தேர்தல். எனவே, அனைவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். அந்தத் தெளிவுடன், உணர்வுடன் வாக்களிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டதுடன், தமிழ்நாடு, புதுச்சேரி 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்"என்று சொன்னார்.

Tags

Read MoreRead Less
Next Story