தூத்துக்குடி துப்பாக்கி சூடு : கூடுதல் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : கூடுதல் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்த தேசிய மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் மனு அளித்திருந்தார். துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்த குற்ற பத்திரிகையை, மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்திருந்ததால், தற்போது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளோம் என்று சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையை ஜூலை ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Tags

Next Story