வேலூர்: விதிமீறல் 15 டூவீலர்கள் பறிமுதல்!

வேலூர் மாநகரில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 15 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டன.
வேலூர் மாநகரில் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேலூர் போக்குவரத்து காவல் நிலைய போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டிய நபர்களிடமிருந்து 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் அறிவழகன் கூறுகையில்," போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தலா 2000 வீதம் முப்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்".

Tags

Read MoreRead Less
Next Story