வெயில் கொடுமையால் மயங்கி விழுந்து வாலிபர் பலி !

வெயில் கொடுமையால் மயங்கி விழுந்து வாலிபர் பலி !

வாலிபர் பலி

கயத்தாறு அருகே தோட்டத்திற்கு சென்றபோது வெயில் கொடுமையால் மயங்கி விழுந்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தெற்கு மயிலோடை கிராமத்தில் தியாகராஜன் மகன் ஜான் சாமுவேல் (37). இவரது மனைவி சகாயமேரி. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்னர். இந்நிலையில் தம்பதி இருவரும் தோட்டத்தில் மல்லிகை பூ செடிக்கு தண்ணீர் பாய்ச்சிட சென்றுள்ளனர். அப்போது கடுமையான வெயில் காரணமாக ஜான் சாமுவேல் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை கயத்தாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து கயத்தாறு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிந்து, ஜான் சாமுவேல் உடலை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story