உச்சபட்ச ராணுவப் பாதுகாப்புத் தயார்நிலையில் இஸ்ரேல்!

உச்சபட்ச ராணுவப் பாதுகாப்புத் தயார்நிலையில் இஸ்ரேல்!

இஸ்ரேல் - ஈரான்

இஸ்ரேல் மீது நேரடி ராணுவத் தாக்குதலை நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு உளவுத்துறை எச்சரித்துள்ளாதல், இஸ்ரேல் ராணுவம் பாதுகாப்புத் தயார்நிலையை அதிகப்படுத்தியுள்ளது.

மத்தியகிழக்கில் உள்ள அமெரிக்க சொத்துக்களுக்கு எதிராக ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தும் சாத்தியக்கூறுகளும் உள்ளதால், அமெரிக்காவும் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த 1-ம் தேதி சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ அதிகாரிகள் 12 பேர் உயிரிழந்ததற்கு, பதிலடி கொடுக்க உள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

Tags

Next Story