கார்த்திக் பிளான் சக்சஸ் ஆனதா? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட் !!

கார்த்திக் பிளான் சக்சஸ் ஆனதா? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட் !!

கார்த்திகை தீபம் 

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்தியும் தீபாவும் ரியா பற்றி ஆனந்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்த நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம்.

மதுவை வீட்டிற்கு வரவைத்து ஆனந்திடம் அவளை பற்றிய எல்லா விஷயங்களையும் தெரியப்படுத்துகின்றனர்.

அதன் பிறகு தீபாவும் ஆமாம் மாமா அவர் சொல்றது எல்லாமே உண்மை தான் என்று சொல்ல, ஆனந்தால் அதை முழுமையாக நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

பிறகு மது வெளியே கிளம்பி வரும் போது ரியா இதை பார்த்து விட, ஆனந்துக்கு எல்லா உண்மையும் தெரிந்துடுச்சோ என்று அதிர்ச்சி அடைகிறாள்.

ஆனந்திடம் வந்து தீபா தன்னை அறைந்து விட்டதாகவும் அத்தை எதுவுமே கேட்கவில்லை என்றும் பிளேட்டை மாற்றி பேசுகிறாள்.

இதனால் ஆனந்த் அப்படியா? நீ அவளை சும்மாவா விட்ட என்று கேட்க, ரியா வேண்டாம் நீ அவகிட்ட எதுவும் கேட்க வேண்டாம், இந்த விஷயம் உங்களுக்கு தெரிய வேண்டாம், பிரச்சனை வேண்டாம்னு தான் சொல்லாமல் இருந்தேன் என்று நல்லவள் வேஷம் போட்டு ஆனந்த் மனசை கலைக்கிறாள்.

அதன் தொடர்ச்சியாக ஐஸ்வர்யா, ஆனந்தை கூப்பிட்டு கார்த்திக்கை வேலையில் இருந்து அனுப்ப என்னிடம் ஒரு வழி இருப்பதாக சொல்லி எதையோ ஒன்றை சொல்ல, ஆனந்த் நீ சொன்ன மாதிரியே செஞ்சிடுறேன் என்று கிளம்பி செல்கிறான்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.

Tags

Read MoreRead Less
Next Story