- Home
- /
- ஷாட்ஸ்

2025 ஜனவரி முதல் தற்போது வரை அமெரிக்காவில் இருந்து 3258 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் பதில் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 1368 பேர் நாடு கடத்தப்பட்ட நிலையில், சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கைகளை ட்ரம்ப் தீவிரப்படுத்தியதால் இந்தாண்டு எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. 2009ல் இருந்து மொத்தம் 18,822 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக போராட்டம் நடத்திய நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நயினார் நாகேந்திரன் உட்பட 93 பேர் மீது வழக்கு திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிக்குள் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக-பாஜக கூட்டணி அமைத்து 8 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்தக் கட்சியும் அக்கூட்டணியை நம்பி போகவில்லை என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். அமித்ஷாவை யார் பாராட்டிப் பேசுவது என்பதுதான் அதிமுக அணிகளுக்கு இருக்கும் ஒற்றுமை. வெறுப்பு அரசியல் செய்யும் அதிமுக - பாஜக கூட்டணியை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகருக்கு நோக்கி வந்த மெட்ரோ ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் பழுதாகி நின்றது. சென்ட்ரல் மெட்ரோ நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுவழியில் நின்றதால் பயணிகள் தவித்தனர். சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக பயணிகள் ரயில் உள்ளே சிக்கிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்மழை காரணமாக சென்னையில் 8 இடங்களில் மரங்கள் சாய்ந்தன. சென்னையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால், சென்னை திருவல்லிக்கேணி செம்பியம், வில்லிவாக்கம் கீழ்ப்பாக்கம் உள்பட 8 இடங்களில் மரங்கள் சாய்ந்தன. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இரவோடு இரவாக மரங்களை அறுத்து அப்புறப்படுத்தினர்.

சென்னையில் பலத்த காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, கிண்டி, ஆலந்தூரில் மழை பெய்து வருகிறது. சென்னையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கக் கடலில் பல மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது. கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து சென்னையில் நாளை நடைபெற இருந்த பாமக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்ததை கண்டித்து ராமதாஸ் அணி போராட்டம் அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நாளை நடைபெற இருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பாமக தெரிவித்துள்ளது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள செங்கோட்டையனுக்கு அக்கட்சியின் உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கோட்டையன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 28 பேர் கொண்ட எனது கண்காணிப்பில் இயங்கும் கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். இவர் இக்குழுவை வழிநடத்தி கழகத்தின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க எனக்கு உறுதுணையாகச் செயல்படுவார். மேலும், கூடுதலாக ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார். என்னோடும், பொதுச்செயலாளருடனும் கலந்தாலோசித்து கழகப் பணிகளை மேற்கண்ட மாவட்டங்களில் மேற்கொள்வார்.













