ஷாட்ஸ்

“வரி வாங்கத் தெரியுது.. நிதி கொடுக்கத் தெரியாதா?” : ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!!

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பாஜ ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்திருந்தது.அதன்படி, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். வரி வாங்கத் தெரியுது.. நிதி கொடுக்கத் தெரியாதா? என ஒன்றிய அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

பாலேகுளி ஏரியில் இருந்து 28 ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் பாலேகுளி ஏரியில் இருந்து, 28 ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என, விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் டிஆர்ஓ தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ்கலெக்டர் சரயு தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் முன்னிலை வகித்தார். கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட 217 மனுக்களில், 107 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மக்களுடன் முதல்வர் திட்டம்.. மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!

மக்களுடன் முதல்வர் திட்டம் தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் பொதுமக்கள் தினசரி அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் அவர்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும் வகையில், ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023 டிசம்பர் 18-ம் தேதி தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மட்டும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டம் மூலம் முதற்கட்டமாக 2,058 முகாம்கள் நடத்தப்பட்டு இதுவரை 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

3 தனிப்படை அமைத்து கொலையாளிக்கு வலை கோரமங்களாவில் இளம்பெண் கொலை வழக்கு: பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

பீகார் மாநிலத்தை சேர்ந்த கிருத்தி குமாரி பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். வேறு விடுதியில் இருந்து அண்மையில் தான் இந்த விடுதிக்கு கிருத்தி குமாரி மாறி வந்திருக்கிறார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 11.10 மணியளவில் விடுதியின் 3வது மாடியில் கிருத்தி குமாரி தங்கியிருந்த அறை வாசலில் அவர் கொலை செய்யப்பட்டார். கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு கிருத்தி குமாரி கொலை செய்யப்பட்டார். தகவலறிந்து இரவு 12 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த கோரமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

காவிரி பாசன மாவட்டங்களில் மிக அதிக பரப்பளவில் சம்பா சாகுபடி செய்ய அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்யப்படுவதற்கு வசதியாக வேளாண் துறை அலுவலகங்கள் வாயிலாக விதை நெல்கள், கூட்டுறவு சங்கங்கள் மூலமாக உரங்கள் மற்றும் பயிர்க்கடன் கிடைப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: மூவர்ணக் கொடியுடன் அணிவகுத்த இந்திய வீரர்கள்!

உலகமே ஆவலோடு எதிர்பார்த்த 33ஆவது ஒலிம்பிக் போட்டிகள் கண்கவர் விழாவுடன் தொடங்கியது. இந்தியா சார்பில் சரத் கமல் மற்றும் பி.வி.சிந்து தேசியக்கொடியை ஏந்திச் சென்றனர். இந்தியா சார்பில் துப்பாக்கிச்சுடுதல், தடகளம் உள்ளிட்ட 16 விளையாட்டுகளில் 117 பேர் களமிறங்குகின்றனர்.

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு; திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இன்று காலை 10 மணியளவில், அனைத்து மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை அள்ளிக் கொடுத்துள்ளார்கள். தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் ஒன்றிய அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது.

தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் 55 மின்சார ரயில்கள் இன்றும், நாளையும் ரத்து

தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் 55 மின்சார ரயில்கள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இயக்கப்படும் பெரும்பாலான மின்சார ரயில்கள் ரத்து. தாம்பரம் ரயில்வே பணிமனை, ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில்கள். மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் மாணவர்கள், பணிக்கு செல்வோர் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடாக கூடுதல் பேருந்துகளை இயக்க பயணிகள் வலிவுறுத்தியுள்ளனர்.

ஒசூரில் சர்வதேச விமான நிலையம்; இந்திய விமான நிலைய ஆணையம் ஒப்புதல்!

ஒசூரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியகூறு குறித்து ஆய்வு செய்ய இந்திய விமான நிலைய ஆணையம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று இந்திய விமான நிலைய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ள அஞ்சலை மீது மேலும் ஒரு வழக்கு

திருவள்ளூர் மாவட்டம், மாத்தூரை சேர்ந்தவர் வக்கீல் சிவா (38). இவரை தனிப்படை போலீசார் விசாரித்தனர். அதில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டதால், சிவாவை நேற்று போலீசார் கைது செய்தனர். தலைமறைவான சம்பவ செந்தில், வக்கீல் சிவா மூலம் பணப் பரிவர்த்தனை செய்ததும், சம்பவ செந்திலுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. பிறகு எழும்பூர் 5வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிவாவை பூந்தமல்லி கிளை சிறையில் அடைத்தனர். சிவா வீட்டிலிருந்து ரூ.9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிவாவுடன் சேர்த்து இதுவரை 5 வக்கீல்கள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள்புறக்கணிப்பு : மாயாவதி விமர்சனம்

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒன்றிய அரசு நடந்துகொள்வது இது புதிதல்ல என்றும் ஒன்றிய அரசின் பாகுபாட்டை உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் ஆட்சிகாலத்திலும் சந்திக்க வேண்டியிருந்தது என்றும் அவர் கூறினார்.

பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய அரசை கண்டித்து திமுக நாளை ஆர்ப்பாட்டம்: மாவட்ட தலைநகரங்களில் நடக்கிறது

ன்றிய பட்ஜெட்டில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய அரசைக் கண்டித்து நாளை மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

காவிரி நீர் பெற்றுத்தர நடவடிக்கை: பிரேமலதா வேண்டுகோள்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று வெளியிட்ட அறிக்கை: எப்போதும் மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் முதலில் களம் இறங்கி மக்களுக்காக போராடும் ஒரு கட்சியாக என்றைக்கும் தேமுதிக இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறோம். அதேபோல் ரேஷன் கடையில் பாமாயில், பருப்பு வகைகள், சர்க்கரை மற்றும் கோதுமை போன்ற பொருட்கள் சரியான முறையில் கிடைக்க ஆவன செய்ய வேண்டும். மேலும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நமது உரிமையான தண்ணீரை பெற்று தர வேண்டும். எனவே காங்கிரஸ் கட்சியுடன் பேசி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திரைமறைவில் நடக்கும் ரகசிய பேச்சுவார்த்தை அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்சை இணைக்க எடப்பாடிக்கு நெருக்கடி: மாஜி அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் அழுத்தம்

அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என நிர்வாகிகள் விரும்புகின்றனர். எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கமாக இருப்பவர்களும், ஒன்றாக இணைய வேண்டும் என வலியுறுத்தி உள்ளதால் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகளை சேர்க்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளார். அப்படியே சேர்த்தால் தேவையில்லாத பிரச்னை, குழப்பம், முக்கிய பொறுப்புகளை கேட்பார்கள் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகள் மீது போடப்பட்ட 5000க்கும் மேற்பட்ட வழக்குகளை ரத்து செய்ய முதல்வர் உத்தரவு: மல்லை சத்யா நன்றி

10 ஆண்டுகால அதிமுக ஆட்சி காலத்தில் ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கும் வகையில் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சிகள் மீது போடப்பட்ட 5000க்கும் மேற்பட்ட வழக்குகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ரத்து செய்ததில், என் மீதான 25க்கும் மேற்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட்டது. இதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாசுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளில், அவர் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பள்ளிக் குழந்தைகள் உயிர் காத்த ஓட்டுநர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘‘உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்த நிலையிலும் தன் பொறுப்பிலிருந்த பள்ளிக் குழந்தைகளின் விலைமதிப்பில்லாத உயிர்களை காப்பாற்றி பின்னர் தனது இன்னுயிரை இழந்த சேமலையப்பன் கடமை உணர்ச்சியையும் தியாக உள்ளத்தையும் நாம் தலைவணங்கி போற்றுகிறோம். காலம் சென்ற பள்ளி வாகன ஓட்டுநர் சேமலையப்பன் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த சேமலையப்பன் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்’’ என கூறி உள்ளார்.

திமுக கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ் நிர்வாகிகள் கருத்து !அறிக்கை தாக்கல் செய்ய ராகுல்காந்தி உத்தரவு

தேர்தலின் போது தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், அவ்வாறு பேசி வரும் தமிழக காங்கிரசில் உள்ள முக்கிய நிர்வாகிகளின் பட்டியலை எடுக்கவும் டெல்லி தலைமை முடிவு செய்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக அறிக்கையை தாக்கல் செய்யும்படி, தமிழக மேலிட காங்கிரஸ் பொறுப்பாளர் அஜோய் குமாரிடம் மேலிட காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரியில் 1,10,000 கனஅடி நீர் திறப்பு!!

கர்நாடக மாநிலம் கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரியில் 1,10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கேஆர்எஸ் அணையிலிருந்து 90,000 கனஅடி நீரும், கபினியில் இருந்து 20,000 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

கார்கில் தியாகிகளுக்கு தலைவணங்குகிறேன் : குடியரசுத் தலைவர்

கார்கில் போரில் தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் நான் தலை வணங்குவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். கார்கில் தியாகிகளின் வீரத்தால் நாட்டில் அனைத்து மக்களும் உத்வேகம் பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். கார்கில் போர் வெற்றியின் 25வது ஆண்டு நிறைவு இன்று அனுசரிக்கப்படுகிறது.