ஷாட்ஸ்

gold

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.53,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6,715 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 8 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்தவர் கைது!!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் 8 கிராம் மெத்தபெட்டமைன் கைதான காதர் மொய்தீனிடம் நடத்திய விசாரணையில் சுல்தான் என்பவரிடம் இருந்து வாட்ஸ் அப் குழு மூலம் போதைப்பொருள் வாங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து போதைப்பொருளைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏப்ரலில் மெட்ரோ ரயில்களில் 80.87 லட்சம் பேர் பயணம்: மெட்ரோ நிர்வாகம்

சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர்; அதிகபட்சமாக ஏப்.8ஆம் தேதி 3.24 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.மார்ச் மாதத்தில் மெட்ரோ ரயில்களில் 86.82 லட்சம் பேர் பயணித்த நிலையில் ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிரிவலப் பாதையில் உள்ள செடி, கொடி, மரங்களில் திடீரென தீ!

திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள கிரிவலப் பாதையில் உள்ள செடி, கொடி, மரங்களில் திடீரென தீப்பற்றியது. செடி, கொடி, மரங்களில் எரிந்து வரும் தீயை அணைக்க தீயணைப்புத்துறை வீரர்கள் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார்.

சென்னையில் கல் குவாரியில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் மூவர் உயிரிழப்பு!!

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே கல்குவாரியில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். கூடுவாஞ்சேரி அருகே பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்த மாணவர்கள் 5 பேர் நேற்று விடுமுறை என்பதால் அருகில் கீரப்பாக்கத்தில் உள்ள கல் குவாரியில் குளிக்க சென்ற போது கல் குவாரியில் இறங்கிய 3 மாணவர்கள் அடுத்தடுத்து ஆழப்பகுதியில் சிக்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒரு மாணவரின் உடல் மட்டும் மீட்கப்பட்டது. மற்ற இருவரை தேடும் பணி தொடர்கிறது.

நீட் தேர்வுக்கு ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு!!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன www.exams.nta.ac.in/NEET/ என்ற இணையதளத்தில் இருந்து மாணவர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் வருகிற மே 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு நீட் நுழைவுத்தேர்வு நடக்கிறது; நாடு முழுவதும் 24 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர்

நுங்கம்பாக்கத்தில்  வெப்பம் 104-ஐ தொடும்: வானிலை ஆய்வாளர்

நுங்கம்பாக்கத்தில் இன்று வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட்டை தொடும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் கடல்காற்று உள் நுழைந்ததால் மீனம்பாக்கத்தில் வெயில் 106டிகிரியை தாண்ட வாய்ப்பு குறைவு என்றும் காற்றில் ஈரப்பதம் அதிகமாக உள்ளதால் உணர்தல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும் கூறிய அவர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் அதிகளவில் பதிவாகும் என்று தெரிவவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்: வானிலை மையம்

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்: சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வட மாவட்டங்களில் அநேக இடங்களில் அதிகபட்ப வெப்ப நிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். தமிழ்நாட்டில் பல பகுதிகளில் 111 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும். தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கொடைக்கானல், உதகைக்கு இ-பாஸ்; நெறிமுறை இன்று வெளியீடு!!

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் நெறிமுறைகள் இன்று வெளியாகிறது; மே 7ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை இ-பாஸ் தொடர்பான நடைமுறைகள் அமலில் இருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் அளிக்க தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் இணையதளம் உருவாக்கம்; ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்கள் அனுமதி, உள்ளூர் வாகனங்களுக்கான நடைமுறைகள் வெளியாகும்.

கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்!!

கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது.

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!!

தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கரூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, சேலம், திருச்சி, திருப்பூர், கோவைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!!

டெல்லி: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் 2024-25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, வரும் மே 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது. நாடு முழுவதும் 557 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும் நீட் தேர்வு நடைபெறுகிறது. மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை நாடு முழுவதும் 24 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர்.ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் https://exams.nta.ac.in/NEET என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட் பதிவிறக்க இயலாவிடில் neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் தெரிவிக்கலாம். ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டால் 011-40759000 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.