காற்றில் பறந்த காஞ்சிபுரம் கலெக்டர் எச்சரிக்கை; விவசாயிகளிடம் கல்லா கட்டும் ஏஜென்டுகள்.

காற்றில் பறந்த காஞ்சிபுரம் கலெக்டர் எச்சரிக்கை; விவசாயிகளிடம் கல்லா கட்டும் ஏஜென்டுகள்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரித்தும் அதனை பொருட்படுத்தாமல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வசூலிக்கும் முகவர்களின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த நவரை பருவத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் நெல் பயிரிடப்பட்டது. கடந்த ஒரு மாதமாக விவசாயிகள் அறுவடை செய்த நெல்களை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பாக அமைக்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனைக்கு எடுத்துச் சென்றால், அங்கு ஆளும் திமுக கட்சி சார்பில் முகவர்கள் நியமிக்கப்பட்டு, மூட்டை ஒன்றுக்கு 50 முதல் 65 வரை கட்டாயமாக வசூலிக்கின்றனர் என்ற புகார் எழுந்தது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மேலும் இது குறித்து விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். ஆர்த்தியிடம் விவசாயிகள் பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தன் பேரில் மாவட்ட ஆட்சியர் சில தினங்களுக்கு முன்பு உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஆய்வு மேற்கண்ட போது சில இடங்களில் இது உறுதி செய்யப்பட்டது.

திமுக சேர்மனிடம் விசிக கவுன்சிலர் சரமாரி கேள்வி; ஸ்ரீபெரும்புதூர் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டத்தில் பரபரப்பு!

இந்நிலையில் இதை எல்லாம் சற்றும் கண்டுகொள்ளாத நேரடி நெல் கொள்முதல் நிலைய முகவர் அங்கு நியமிக்கப்பட்ட ஊழியரை கையில் போட்டுக்கொண்டு கட்டாய வசூலில் ஈடுபடுகின்றனர்.

விவசாயிகளிடம் கல்லா கட்டும் ஏஜென்டுகள்


அவ்வகையில் காஞ்சிபுரம் அடுத்த குனகரம்பாக்கம் கிராமத்தில் அமைக்கப்பட்ட அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் டோக்கன் பெறுவதற்கு கூட சிபாரிசு தேவைப்படுகிறது.மேலும் பணம் செலுத்தினால் மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் தருவதாக புகார் எழுந்துள்ளது.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் எதிரொலி: பர்கூர் வழியாக கர்நாடகா செல்லும் வாகனங்கள் தீவிர சோதனை..!

இதுகுறித்து விவசாயி ஒருவர், அங்கு நியமிக்கப்பட்ட அரசு ஊழியரிடம் கேட்டபோது அவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் விவசாயி பணம் அளிக்கும் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

கடந்த 120 நாட்களாக அரும்பாடு பட்டு உருவாக்கப்பட்ட நெல்லை கொள்முதல் செய்வதற்கு முன்பு பல ஆயிரங்களை செலவு செய்த பின்னும், கொள்முதலுக்கும் லஞ்சம் தர வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது என வருத்தத்துடன் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

உடனடியாக மாவட்ட நிர்வாகம் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விவசாயிகள் முன் வைத்துள்ளனர்.

Read MoreRead Less
Next Story