குக்கரை எப்படி பராமரிக்கலம்?

குக்கரை எப்படி பராமரிக்கலம்?

குக்கர் பராமரிப்பு

1.குக்கரின் கொள்ளளவில் 3ல் 2 பங்கு. அதாவது குக்கரின் முக்கால் பகுதிக்கு மட்டும் அரிசி மற்றும் காய்கறி வகைகளைச் சமைக்க வேண்டும்.

2.vஅடுப்பில் இருக்கும் போது முடிந்த வரை அடுப்பின் அருகில் தான் இருக்க வேண்டும். ஏனென்றால் குக்கரில் உள்ள பொருள்கள் வெந்து தயாராகி விட்டால் விசில் அடித்துக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு முறை விசில் அடிக்கும் பொழுதும் நீராவி வெளியேறுவதால் குக்கர் அருகில் இல்லாமல் பக்கத்து அறையிலோ அல்லது வெளியில் தெரிந்தவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தாலோ நீராவியின் அழுத்தம் கூடி குக்கரில் தண்ணீர் குறை வதால் குக்கரில் உள்ள பாதுகாப்பு வால்வு கெட்டுப் போய் விடும். அது ஏற்கெனவே நீண்ட நாட்களாக மாற்றப்படாமல் இருந்து அதன் தன்மை குறைந்து இருந்தாலும் குக்கர் வெடிப்பதற்கு வசதி ஏற்படும்.

3.குக்கரில் உள்ள பாதுகாப்பு வால்வை (சேஃப்டி வால்வு) எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அழுக்கு அடைந்தால் வெடிக்கும் அபாயம் உண்டு

4. குக்கரில் உள்ள நீராவி வெளியேறும் வென்ட் பைப்பில் பருப்பு, பயற்றுத் தோல போன்றவை அடைக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏதும் அடைத்து இருந்தால் ஊசி கொண்டு குத்தி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

5.குக்கரில் உள் தட்டு வைத்து பாத்திரம் வைத்து சமைப்பதினால் அடியில் உப்புக கறை போல் ஏற்பட்டு விடக் கூடும். அதைத் தவிர்க்கப் புளித் துண்டு அல்லது பிழிந்த எலுமிச்சம் பழத் தோல் போட்டு பாத்திரம் வைத்து சமைத்தால் கறை ஏற்படாது.

6. குக்கரில் வேக வைக்க வேண்டிய பொருள் களை வைத்து அடுப்பில் வைத்தவுடன் குக்கர் குண்டை போடக் கூடாது. சிறிது நேரம் கழித்து குக்கர் மூடியில் உள்ள வென்ட் பைப் வழியாக நீராவி வருவதைப பார்த்த பிறகே குண்டு போட வேண்டும் நீராவி வரவில்லையென்றால் அடுப்பைச் சிறிய அளவில் வைத்து விட்டு குக்கர் மூடியில் உள்ள வென்ட் பைப்பில் பொருள்கள் அடைத்து இருந்தால் சுத்தம் செய்துவிட்டு குண்டு போட வேண்டும்.

7.குக்கரில் கைப்பிடி உடைந்து விட்டால் உடனடியாகப் புதியது மாற்றி விட வேண்டும். ஏனென்றால் குக்கரில் பொருள்களை வைத்து மூடுவதற்கும், வெந்த பின் திறப்பதற்கும் கஷ்டமாக இருக்கும். அதோடு அழுத்தத்தில் இருக்கும் நீராவி நம் உடம்பின் மீது படுவதற்கும் வழியாக இருக்கும்.

8.பிரஷர் குக்கரில் உள்ள 'காஸ் கெட்'டை சமையல் முடிந்ததும் தொட்டி நீரில் போட்டு விட்டு எப்போது தேவையோ அப்போது எடுத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.

9.புதிய காஸ்கெட் வாங்கியவுடன் பழைய காஸ்கெட்டை எறிந்து விட வேண்டும்.

10.குக்கரின் கைப்பிடியில் இருக்கும் ஆணியில் மாதம் ஒரு முறை எண்ணெய் போட்டு வந்தால் துருப்பிடிக்காமல் இருக்கும்.

11.குக்கரின் வெயிட்டை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும் போதும் தூசி, அடைப்புகள் முதலியன இல்லாமல் இருக்கிறதா என்று பார்த்த பிறகே பயன்படுத்த வேண்டும்.

12. குக்கர் மூடியில் பொங்கி வருவது ஒன்றும் குறையல்ல. பருப்பு வேக வைத்தால் உடன் பொங்கி வென்ட் பைப் வழியாகத் தண்ணீர் வெளிவரும். பருப்பு வேக வைக்கும் போது ஒரு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றினால் பொங்காது.

13. குக்கரில் காய்கறி வேகும் போது அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் விட வேண்டும்.

14. பிரஷர் குக்கரை சமையலுக்குப் பயன் படுத்துவது நல்லது. விரைவில் சமைக்க முடிவதுடன் உணவுச் சத்துகள் பெருமள வில் வீணாவதையும் இது தடுக்கிறது.

15. குக்கரின் உள்பாகத்தில் கறை படிந்து கறுப்பாகக் காணப்பட்டால் கவலைப்படத் தேவையில்லை. புளித்த மோரைக்கறை யுள்ள அளவுக்கு ஊற்றி 2,3 நாட்கள் ஊர வைத்தால் அந்தக் கறை நீங்கி குக்கா பளிச்சென்று இருக்கும்.

Tags

Read MoreRead Less
Next Story