தினமும் கிரீன் டீ குடித்தால் உடல் எடை குறையுமா?

தினமும் கிரீன் டீ குடித்தால் உடல் எடை குறையுமா?

கிரீன் டீ

சில ஆராய்ச்சிகள் கிரீன் டீ உடல் எடையைக் குறைக்கும் என்று சொன்னதும், உடல் எடையைக் குறைக்க முயற்சிப்போர் பலரும் இதனை தினமும் குடித்து வருகிறார்கள்.

காபி, பால் டீயை விட கிரீன் டீ ஆரோக்கியமானது என்பதில்லை எந்த ஒரு சந்தேகமும் இல்லை ஏனெனில் இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. ஆனால் இது உண்மையிலேயே உடல் எடையைக் குறைக்க உதவுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும்

கிரீன் டீயில் வைட்டமின்களான ஏ, பி, பி5,டி. ஈ.சி,கே,எச் மற்றும் செலினியம்,குரோமியம், ஜிங்க், காப்ஃபைன், மாங்கனீசு போன்றவை வளமாக நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, கிரீன் டியில் (EGCG) என்னும் சேர்மமும் உள்ளது.

உடல் சாதாரணமாகவே வெப்பத்தை உருவாக்கும். இந்த வெப்பம் தான் கலோரிகளை எரிக்க உதவுகிறது. ஆனால் கிரீன் டீ குடிக்கும் போது, உடலின் வெப்பமானது அதிகரிக்கப்படுகிறது. கிரீன் டீயினால் உடலின் வெப்பம் அதிகரிப்பதற்கு காரணம், அதில் உள்ள EGCG தான். இப்படி வெப்பம் அதிகமாவதால், கலோரிகளின் அளவு அதிகமாக எரிக்கப்படுகிறது. கலோரிகள் அதிகம் எரிக்கப்படுவதால், உடல் எடை வேகமாக குறைகிறது.

கிரீன் டீயின் ஒரு கப்பில் 30 மி.கி காப்ஃபைன் தி உள்ளது. காப்ஃபைன் உடலின் ஆற்றலை தூண்டி, உடற்பயிற்சியில் நீண்ட நேரம் சிறப்பாக ஈடுபட் உதவி, அதன் காரணமாக மறைமுகமாக உடல் எடையைக் குறைக்கிறது.

ஆய்வு ஒன்றில், கிரீன் 12 குடிக்காமல்,வெறும் உடற்பயிற்சியை மேற்கொண்டு வந்தவர்களை விட, தொடர்ந்து கிரீன் டீ குடித்து, உடற்பயிற்சி செய்து வந்தவர்களின் உடலில் 15% அதிகமாக கொழுப்புக்கள் கரைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

மேலும் கிரீன் டீ குடிக்காமல் உடற்பயிற்சி செய்து வந்தவர்களின் உடலில் 3% கொழுப்புக்கள் தான் கரைக்கப் பட்டிருந்ததாம்.

கிரீன் டீயை ஒரு நாளில் 23 கப்பிற்கு மேல் குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் இதய துடிப்பை அதிகரித்து, தூக்கமின்மை, குமட்டல், வாந்தி, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, களைப்பு, மன இறுக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும்.

கிரீன் டீயை குடிக்க ஆரம்பிக்கும் முன், மருத்துவரிடம் ஆலோசனை செய்து கொள்வது நல்லது. அதிலும் உங்களுக்கு இதயம் பிரச்சனை, சிறுநீரக பிரச்சனை, கல்லீரல் பிரச்சனை, உயர் இரத்த அழுத்தம்,நீரிழிவு, இரத்த சோகை, ஆஸ்டியோ போரோசிஸ் போன்றவை இருந்தால்.

கிரீன் டீ குடிப்பதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் இப்பிரச்சனைகளுக்கான மருந்து மாத்திரைகளை 7 எடுக்கும் போது கிரீன் டீ குடித்தால், அவை இடைவினைபுரியும்.

உலர் திராட்சையை தினமும் நீரில் ஊற வைத்து சாப்பிடுங்க உலர் திராட்சை எண்ணற்ற நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. பாதாம், - உலர் திராட்சை, பிஸ்தாவை ஏன் நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டுமென்று சொல்கிறார்கள் H தெரியுமா? உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் + கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், - பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த உலர் திராட்சையை எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையால் பாதிக்கப் பட்டவர்களும், எவ்வித அச்சமும் இல்லாமல் சாப்பிடலாம். குறிப்பாக இதனை நீரில் ஊற வைத்தோ அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்தோ சாப்பிட்டால், பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

* இரத்த சோகை உள்ளவர்கள்,இதனை தினமும் ஸ்நாக்ஸாக சாப்பிட்டு வந்தாலோ அல்லது இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து உலர் திராட்சையை உட்கொண்டு வந்தாலோ, இரத்தணுக்களின் அளவை அதிகரிக்கலாம்.

* கருப்பு நிற திராட்சையில் கொல்ஸ்ட்ரால் இல்லை எனவே அதனை உள்ளவர்கள், அடிக்கடி உட்கொண்எத்தால். உடலில் தேங்கியுள்ள கெட்ட தோளஸ்ட்ராஸ் குறையும். கொலஸ்ட்ரால் பிரச்சை

* சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்து ஏற்பட்டிருந்தால், அதை குணமாக்க ஆயுர்வேதம் பரிந்துரைப்பது இந்த வழியைத் தான் அது என்னவெனில் இரவில் படுக்கும் போது ஒரு கப் நீரில் 810 உலர் திராட்சையை ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து அதனை உட்கொண்டு வருவது தான்.

* உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், ஒரு லிட்டர் தண்ணீரில் 25 உலர் திராட்சையை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, நாள் முழுவதும் அந்த நீரைக் குடித்து, உலர் திராட்சையை உட்கொண்டு வந்தால், விரைவில் உடல் வெப்பம் தணியும்.

* மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், ஒரு கப் நீரில் 25 உலர் திராட்சையைப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி, மசித்து, அதில் தேன் கலந்து. தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து விரைவில் விடுபடலாம். கர்ப்ப காலத்தில் இப்பிரச்சனையை கர்ப்பிணிகள் அதிகம் சந்திப்பார்கள். எனவே கர்ப்பிணிகளும் இந்த முறையைப் பின்பற்றலாம்.

Tags

Read MoreRead Less
Next Story