முளை கட்டிய பயறு காலை உணவில் அவசியம்.. காரணங்கள் இதோ!

முளை கட்டிய பயறு காலை உணவில் அவசியம்.. காரணங்கள் இதோ!

முளை கட்டிய பயறு 

முளைகட்டிய தானியங்களில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. காலை உணவில் சேர்க்கக்கூடிய உணவுகளில் முளை கட்டிய பயறு மிகவும் சிறந்த உணவு.முளை கட்டிய தானியங்களில் உள்ள நார்ச்சத்து, அமினோ அமிலங்கள், புரோட்டியோலிடிக் என்சைம்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஆகியவை பல தீவிர நோய்களைத் தடுக்க உதவுகின்றன. 1.இரத்த சோகையை போக்கும் அருமருந்து: அனிமியா பிரச்சனையால் நீங்களும் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் காலை உணவில் முளை கட்டிய பயறை சேர்த்துக்கொள்ளலாம்.முளை கட்டிய பயறில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால், உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்தசோகை போன்ற கடுமையான பிரச்சனைகளை குணப்படுத்தும் .. 2.இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்: முளை கட்டிய தானியங்களில் நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இது ரத்தத்தில் கலந்துள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுகளை அகற்றுவதன் மூலம் உடலை டீடாக்ஸ் செய்ய உதவுகிறது.3.கண்பார்வை கூர்மைக்கு உதவும்: முளை கட்டிய பயறு வைட்டமின் ஏ நிறைந்ததாகக் கருதப்படுகிறது. எனவே, இது கண் பார்வை கூர்மைக்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கண் நோய் அண்டாமல் கண்களை பாதுகாக்கலாம்.4.ஜீரண சக்தியை அதிகரிக்கும்: வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உடல் பருமனும் குறையும்.அமிலத்தன்மை, புளித்த ஏப்பம், வாயுத் தொல்லை போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.5.சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்: முளை கட்டிய தானியங்களில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தைக் குறைத்து, முதுமையை தடுப்பதன் மூலம் ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்துகிறது.

Tags

Read MoreRead Less
Next Story