வாக்குப்பதிவு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வாக்குப்பதிவு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

காரைக்குடியில் வாக்குப்பதிவு பெட்டி வைக்கப்பட்டுள்ள அறையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.


காரைக்குடியில் வாக்குப்பதிவு பெட்டி வைக்கப்பட்டுள்ள அறையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்தது. 6 தொகுதிகளை உள்ளடக்கிய சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்த பின்பு காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் தனித்தனியாக பாதுகாப்பு அறைகள் உருவாக்கப்பட்டு அங்கு வாக்குபதிவு செய்யப்பட்ட பெட்டிகளை தற்போது வைத்து வருகின்றனர். அங்கு துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர் இன்று காலை 10 மணி வரை 6 தொகுதிகளில் இருந்தும் வாக்கு பெட்டிகள் வந்து சேரும் என தெரிய வருகிறது. அதன் பின்பு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசியல் கட்சி மூவர்கள் முன்னிலையில் அந்தந்த தொகுதியில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பெட்டிகள் அரை மூடி சீல் வைக்கப்பட உள்ளது. தற்போது வாக்குப்பெட்டிகள் வந்து சேர்ந்து அந்தந்த அறைகளில் வைக்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Read MoreRead Less
Next Story