24 மணி நேரமும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிக்க நடவடிக்கை

24 மணி நேரமும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிக்க நடவடிக்கை

மாவட்ட ஆட்சியர் 

24 மணி நேரமும் வாக்குப்பதிவு இயந்திரங்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு பொறியல் கல்லூரியில், பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இங்கு கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை சரி பார்த்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,

சி.எஸ்.எப் பாதுகாப்பு படையினர் 17 பேர், தமிழ்நாடு ஆயுதப்படையினர் 27 பேர் மற்றும் உள்ளூர் போலீசார் என 300 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் கட்டிடங்களின் நான்கு புறமும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் அறைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட நீதிபதி அல்லது தேர்தல் அலுவலரால், போலீசார் பாதுகாப்புடன் தினமும் கண்காணிக்கப்படும் எனவும், அந்த ஆய்வின் போது தேவைப்பட்டால் கட்சி முகவர்களும் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்

Tags

Read MoreRead Less
Next Story