கூடுவாஞ்சேரி காவல் நிலைய காவலருக்கு வளைகாப்பு

கூடுவாஞ்சேரி காவல் நிலைய காவலருக்கு வளைகாப்பு

காவலருக்கு வளைகாப்பு

தாம்பரம் காவல் எல்லைக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி காவல் நிலைய பெண் காவலருக்கு வளைகாப்பு
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் காவல் எல்லைக்கு உட்பட்ட, கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில், பெண் காவலராக பணியாற்றி வருபவர் தேவி (28) இவர் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியை சேர்ந்தவர். இவருக்கும் தனியார் கம்பெனியில் பணியாற்றி வரும் தூத்துக்குடி மாவட்டம், சிவகாசி பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (31) என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்தோடு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த காவல்நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வரும் தேவி திருமணத்திற்கு பிறகு தன் கணவரோடு கூடுவாஞ்சேரி அருகே வாடகை வீட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தேவி ஒன்பது மாத கர்ப்பிணி என்பதாலும் இவர் மகப்பேறு விடுப்பில் சொந்த ஊருக்கு செல்ல இருப்பதால். இவருக்கு கூடுவாஞ்சேரி காவல் துறையினர் சார்பில் வளைகாப்பு விழா கொண்டாடப்பட்டது. குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஆனந்ததாண்டவம் தலைமையில், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள் உதயகுமார், தனசேகரன் ஆகியோர் தாய்மாமன் சீர்செய்தனர். மேலும் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர்கள் சகோதரி, நாத்தனார் உறவுமுறையில் கைகளில் வளையல் பூட்டி, 7 வகை உணவளித்து, சீர் செய்தனர் இவ்விழாவில் கூடுவாஞ்சேரி உதவி ஆணையர் ஜெயராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு தம்பதிகளுக்கு புத்தாடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story