ஆடுகள் மேய்ந்த தகராறில் 4 பேர் மீது வழக்குப்பதிவு

ஆடுகள் மேய்ந்த தகராறில் 4 பேர் மீது வழக்குப்பதிவு

மொஞ்சனூர் கிராமத்தில், தம்பியின் வளர்ப்பு ஆடுகள் அண்ணன் காட்டில் மேய்ந்ததால் ஏற்பட்ட தகராறில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மொஞ்சனூர் கிராமத்தில், தம்பியின் வளர்ப்பு ஆடுகள் அண்ணன் காட்டில் மேய்ந்ததால் ஏற்பட்ட தகராறில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மல்லசமுத்திரம் அருகே, மொஞ்சனூர் கிராமம், வாவிக்காடு பகுதியை சேர்ந்தவர் அர்த்தனாரி63. இவருக்கும் இவரது வீட்டின் அருகில் வசிக்கும் இவரது தம்பி முத்துசாமி60. ஆகியோருக்கு கடந்த 8 ஆண்டுகளாக 3ஏக்கர் நிலம் சம்மந்தமாக பிரச்சனை இருந்து வருகின்றது. இந்நிலையில், கடந்த 28 ம்தேதி காலை 9மணிக்கு, முத்துசாமியின் வளர்ப்பு ஆடுகள் அர்த்தனாரியின் காட்டிற்கு மேய்ச்சலுக்கு சென்றுள்ளது.

இதில், இருவருக்கும் இடையில் பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சத்தம்கேட்டு வீட்டில் இருந்து வந்த அர்த்தனாரி மனைவி பாப்பாத்தி53, முத்துசாமி மனைவி பிரேம்குமாரி52 ஆகிய இருவரும் மாறிமாறி தாக்கி கொண்டனர். நான்குபேருக்கும் காயம் ஏற்பட்டது. இதில், அர்த்தனாரி தரப்பினர் நாமக்கல் அரசு மருத்துவமனையிலும், முத்துசாமி தரப்பினர் ராசிபுரம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைபெற்று வருகின்றனர். எலச்சிபாளையம் போலீசார் நான்கு பேரின்மீதும் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story