ஈரோடு வாக்கு என்னும் மையத்தில் சிசிடிவி கேமரா பழுது: அமைச்சர் புகார்

ஈரோடு வாக்கு என்னும் மையத்தில் சிசிடிவி கேமரா பழுது:  அமைச்சர் புகார்

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்

ஈரோடு வாக்கு என்னும் மையத்தில் சிசிடிவி கேமரா பழுது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் ஈரோடு காந்திஜி சாலையில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலில் பொதுமக்களுக்கு தர்பூசணி இளநீர் மோர் உள்ளிட்டவை வழங்கிய பின் தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஈரோடு வாக்கு என்னும் மையங்களில் கண்காணிப்பு கேமரா பழுது தொடர்பாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது என்றார். நெடுஞ்சாலைகளின் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரங்கள் நட நெடுஞ்சாலைத்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் , அனுமதி கிடைத்தவுடன் திமுக சார்பில் மரங்கள் நடப்படும் என்றார். கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு வராமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் .கீழ் பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை பவானிசாகர் அணையில் குடிநீருக்கு மட்டுமே நீர் இருப்பில் உள்ளது என்றார்

Tags

Read MoreRead Less
Next Story