முதல்வரின் மனைவி படகு சவாரி

முதல்வரின் மனைவி படகு சவாரி

கொடைக்கானலில் நட்சத்திர வடிவிலான ஏரியில் முதல்வரின் மனைவி துர்க்கா ஸ்டாலின் சிகாரா அலங்கார படகில் குடும்பத்துடன் படகு சவாரி மேற்கொண்டார்.


கொடைக்கானலில் நட்சத்திர வடிவிலான ஏரியில் முதல்வரின் மனைவி துர்க்கா ஸ்டாலின் சிகாரா அலங்கார படகில் குடும்பத்துடன் படகு சவாரி மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு நேற்று முன் தினம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் வருகை புரிந்து பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி உள்ளார், இதனை தொடர்ந்து அவரது மனைவி துர்க்கா ஸ்டாலின் நேற்று பூம்பாறை மலைக்கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்று வந்த நிலையில் இன்று மாலை வேளையில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர வடிவிலான ஏரிக்கு குடும்பத்தினருடன் வருகை புரிந்து அங்குள்ள நகராட்சி படகு குழாமில் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து சிகாரா அலங்கார படகில் படகு சவாரி மேற்கொண்டதுடன் ஏரியின் சிறப்பம்சத்தையும் நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார் ,இதனையடுத்து துர்க்கா ஸ்டாலின் படகு சவாரி மேற்கொண்டதை சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story